செய்திகள் :

ராமநாதபுரம்: ரூ.60 லட்சம் மதிப்புடைய ரத்தினக்கல் வழிப்பறி... 7 பேரை மடக்கி பிடித்த போலீஸ்!

post image

மதுரை மாவட்டம் கச்சைகட்டி பெருமாள் நகரை சேர்ந்தவர் முனியசாமி. இவர் கடந்த 30 ஆண்டுகளக ஆபரண நகைகளில் ஜாதிக்கற்களை பதிக்கும் தொழில் செய்து வருகிறார். இவற்றுடன் அதுபோன்ற கற்கள் விற்பனையிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் தன்னிடம் அதிக விலை மதிப்பு கொண்ட ரத்தினக்கல் ஒன்று விற்பனைக்கு உள்ளதாக சிவகாசியை சேர்ந்த புரோக்கர் ஜாகிரிடம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக திருநெல்வேலியை சேர்ந்த ரவி என்பவரை முனியசாமியிடம் அறிமுகப்படுத்தியுள்ளார் ஜாகிர். ரவி ரத்தினக்கல் விற்பனை குறித்து பெரியகுளத்தை சேர்ந்த செய்யது அபுதாஹிர் கூறியதை தொடர்ந்து, வியாபாரி முனியசாமியை தொடர்பு கொண்ட அபுதாஹி ர் முனியசாமியை ராமநாதபுரத்திற்கு வர கூறியுள்ளார்.

இதையடுத்து கடந்த ஜனவரி 24-ம் தேதி காரில் ரத்தினக்கல்லுடன் ராமநாதபுரம் ரயில்வே கேட் பகுதிக்கு வந்துள்ளார் முனியசாமி. அப்போது அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த கும்பல் ஒன்று முனியசாமியை மிரட்டி அவரிடம் இருந்த ரூ.60 லட்சம் மதிப்புடைய அலெக்‌ஸாண்டர் வகை ரத்தினக்கல்லையும், அதற்கான ரசீது, செல்போன் மற்றும் ரூ 15 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்து சென்றனர்.

ரூ 60 லட்சம் மதிப்புடைய ரத்தினக்கல்
அசாருதீன்

இது குறித்து ராமநாதபுரம் போலீஸாரிடம் புகார் சென்ற நிலையில் மாவட்ட கண்காணிப்பாளர் சந்தீஷ் உத்தரவுப்படி, அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பொன்தேவி தலைமையில் தனிப்படை அமைத்து வழிப்பறி கும்பல் குறித்து விசாரணையில் இறங்கினர்.

முகம்மது நவுபால்

இதனை தொடர்ந்து சம்பவ பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து, அதில் பதிவான வழிப்பறி கும்பலின் காரினை கண்டறிந்தனர். தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், பெரியகுளம் அபுதாஹிர், இளையான்குடி முகம்மது அசாருதீன், முகம்மது நவுபால், தூத்துக்குடி முத்து செல்வம், கனகராஜ், மற்றொரு கனகராஜ், அத்திரமரபட்டி ராஜாஜோஸ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.

இவர்களிடம் இருந்து சுமார் 60 லட்சம் மதிப்புடைய ரத்தினக்கல், அதற்கான ரசீது உள்ளிட்ட வழிப்பறி செய்யப்பட்ட அனைத்தையும் மீட்டனர். இதையடுத்து இவர்கள் மீது வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்த போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு: காதலனைக் கொன்று தண்டவாளத்தில் போட்ட பெண்; பஸ் டிக்கெட்டால் சிக்கியது எப்படி?

பெங்களூரு அருகே கடந்த மாதம் 19ம் தேதி ரயில் தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் ரயில் மோதி இறந்து கிடந்தார். அவரது உடல் இரண்டு துண்டுகளாகக் கிடந்தது. அவர் ரயில் விபத்தில் இறந்திருக்கலாம் என்று கருதி போலீஸார்... மேலும் பார்க்க

Digital Arrest: 7 நாள் டிஜிட்டல் கைதை விரும்பி ஏற்ற மும்பை பெண்; பறிபோன ரூ.37 லட்சம்; என்ன நடந்தது?

நாடு முழுவதும் ஆன்லைன் மோசடிகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. அதுவும் சி.பி.ஐ அல்லது அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் என்று கூறி, பொதுமக்களை டிஜிட்டல் முறையில் கைது செய்து பணத்தை அபகரிக்கும் செயல்கள் அதிக... மேலும் பார்க்க

`செத்துத் தொலைடா...’ - பழிதீர்க்கப்பட்ட ஆரணி இளைஞன்; முகத்தில் கொடூர வெட்டு; பதற வைத்த கொலை

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரில் உள்ள ஆரணிப்பாளையம் சாந்தா தெருவைச் சேர்ந்தவர் அருணகிரி. இவரின் மகன் கரிமா என்கிற விக்னேஷ் (27). ஏ.சி, வாஷிங் மெஷின் பழுது பார்க்கும் வேலை செய்துவந்த விக்னேஷ் மீது கட... மேலும் பார்க்க

மேட்ரிமோனியில் பெண்பார்த்த LIC ஏஜென்ட்; வரன்பார்க்க வருவதாக நகையைத் திருடிய பெண்கள்

கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் அருகே உள்ள காரவிளையில் 55 வயதுள்ள ஒருவர் எல்.ஐ.சி. ஏஜெண்டாக பணிபுரிந்து வருகிறார். இவர் தன் மனைவியைபப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். இது சம்பந்தமான வழக்கு நாகர்கோவ... மேலும் பார்க்க

பிசினஸ் விசாவில் 59 முறை இந்தியாவுக்கு வந்த நைஜீரிய பெண்கள்; ரூ.75 கோடி போதைப்பொருளுடன் கைது!

உள்நாட்டு விமான நிலையத்தில் பெரிய அளவில் சோதனை இருக்காது என்பதால், ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இரண்டு பெண்கள் கடந்த சில ஆண்டுகளாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.நைஜீரியாவை சேர்ந்த பாம்பா பாண்டா(31)... மேலும் பார்க்க

`ஆடு ஜீவிதம்' போல கொடுமையை அனுபவித்த அப்பாராவ் - 20 ஆண்டுகளுக்குப்பின் உறவினரிடம் சேர்ந்த சம்பவம்

`ஆடு ஜீவிதம்' படத்தில் வருவதுபோல் 20 ஆண்டுகள் தமிழகத்தில் கொத்தடிமையாக ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஆந்திராவைச் சேர்ந்த முதியவரை அரசுத்துறையினர் மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்த சம்பவம் சிவகங்கை மாவட்ட... மேலும் பார்க்க