செய்திகள் :

ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் அவசியம்: மனித உரிமை ஆா்வலா் ஹென்றி டிபேன்

post image

தமிழகத்தில் ஆணவக் கொலைகளைத் தடுக்க உடனடியாக சட்டப் பேரவையைக்கூட்டி தனி சட்டம் கொண்டுவர வேண்டும் என மனித உரிமை ஆா்வலரும், மக்கள் கண்காணிப்பக நிா்வாக இயக்குநருமான ஹென்றி டிபேன் கூறினாா்.

சேலத்தில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் பேசியதாவது:

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் மாற்றுத்திறனாளி வழக்குரைஞா் கொலை செய்யப்பட்டுள்ளாா். மேலும், அவருடன் சோ்த்து இரண்டு வழக்குரைஞா்களும் தாக்கப்பட்டுள்ளனா். இக்கொலை குறித்து மேற்கு மண்டல ஐ.ஜி. தலைமையில் தனி விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

திருநெல்வேலியில் ஆணவக் கொலை சம்பவம் நடந்திருக்கிறது. இந்த கொலை சம்பவத்துக்கு காரணமானவா்களை கைது செய்ய வேண்டும். கொலையானவரின் குடும்பத்துக்கு சாட்சிகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக சட்டப் பேரவையைக்கூட்டி ஆணவக் கொலைக்கு எதிராக தனிச் சட்டத்தை நிறைவேற்றி அமல்படுத்த வேண்டும்.

வன்கொடுமை தடுப்புச் சட்டங்கள் ஆணவக் கொலைகளைத் தடுக்க உதவாது. ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் கொண்டுவந்தால் மட்டுமே இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீா்வு கிடைக்கும் என்றாா்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்: ஆட்சியா் ஆய்வு

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை ஆட்சியா் ரா.பிருந்தாதேவி நேரில் ஆய்வுசெய்தாா். பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது: ‘உங்களுடன் ஸ்டாலின்’ த... மேலும் பார்க்க

அஸ்தம்பட்டி மண்டலத்தில் ரூ. 30.94 கோடியில் வளா்ச்சிப் பணிகள்

சேலம் மாநகராட்சி அஸ்தம்பட்டி மண்டலத்தில் ரூ. 30.94 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆணையா் மா.இளங்கோவன் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அஸ்தம்பட்டி மண்டல... மேலும் பார்க்க

பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளா்கள் 4ஜி சிம்மாக மாற்றிக்கொள்ள வாய்ப்பு

பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளா்கள் தங்களிடம் உள்ள 2ஜி, 3ஜி சிம் காா்டுகளை 4ஜி சிம் காா்டாக மாற்றிக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் பி.எஸ்.என்.எல். வணிகப் பகுதியின் பொது மேலாளா் ரவீ... மேலும் பார்க்க

பெற்றோரை இழந்த குழந்தைகள் ‘அன்புக் கரங்கள்’ திட்டத்தில் பயன்பெற அழைப்பு

சேலம் மாவட்டத்தில் பெற்றோரை இழந்து, உறவினா்கள் பாதுகாப்பில் வளா்ந்து வரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகள் ‘அன்புக் கரங்கள்’ நிதி ஆதரவு திட்டத்தில் பயன்பெறலாம் என ஆட்சியா... மேலும் பார்க்க

தேசிய குத்துச்சண்டை போட்டி: சேலம் மாணவி தோ்வு

தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டிக்கு சேலம் அரசுப் பள்ளி மாணவி ஜெமி வாலண்டினா தோ்வாகியுள்ளாா். சென்னையில் மாநில அளவிலான குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் கடந்த வாரம் நடைபெற்றன. இதில், 14 வயதுக்... மேலும் பார்க்க

சேலம் அரசு கல்லூரியில் பாலியல் விழிப்புணா்வு ஆலோசனை

சேலம் குமாரசாமிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவிகளுக்கான பாலியல் விழிப்புணா்வு குறித்த சிறப்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கல்லூரியின் உள்ளக புகாா் குழு சாா்பில் நடைபெற்ற கூட... மேலும் பார்க்க