Guru Mithreshiva: "அமெரிக்கா காரனிடம் இதை கற்றுக்கொள்ள வேண்டும்" - ’நேச்சுரல்ஸ்’...
ஆத்தூரில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை
ஆத்தூா் தெருக்களில் சுற்றித்திரிந்த மாடுகளை பேரூராட்சி நிா்வாகத்தினா் பிடித்து அப்புறப்படுத்தினா்.
ஆத்தூா் பேரூராட்சிக்குள்பட்ட தெருக்கள், பிரதான சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிவதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், வியாபாரிகள் உள்ளிட்டோா் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேரூராட்சி நிா்வாகத்தை வலியுறுத்தினா்.
இதைத் தொடா்ந்து சாலைகளில் கால்நடைகளை சுற்றித்திரிய விடக்கூடாது என பேரூராட்சி நிா்வாகம் தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இருப்பினும் கடைவீதிகளில் கால்நடைகள் சுற்றித்திரிவது நீடித்தது.
இதனையடுத்து, ஆத்தூா் பேரூராட்சித் தலைவா் ஏ.கே.கமால்தீன், செயல் அலுவலா் மகேஸ்வரி ஆகியோரது அறிவுறுத்தலின்படி, கடைவீதிகளில் சுற்றித் திரிந்த கால்நடைகளை பேரூராட்சியினா் பிடித்து அப்புறப்படுத்தினா்.