செய்திகள் :

ஆந்திர முன்னாள் முதல்வர் ரோசய்யாவின் சிலை திறப்பு!

post image

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில், ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரான கொனிஜேட்டி ரோசய்யாவின் சிலையை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே இன்று (ஜூலை 4) திறந்து வைத்தார்.

ஆந்திரப் பிரதேசத்தின் மறைந்த முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான கொனிஜேட்டி ரோசய்யாவின் பிறந்த நாள் இன்று (ஜூலை 4) கொண்டாடப்படுகிறது.

அவரது பிறந்த நாளை மாநிலம் முழுவதும் அரசு விழாவாகக் கொண்டாட தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, அங்குள்ள அனைத்து மாவட்டங்களிலும் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தின் லக்டி கா புல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அவரது முழு உருவச் சிலையை, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே இன்று (ஜூலை 4) திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில், அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, துணை முதல்வர் மல்லு பட்டி விக்ரமர்கா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டு ரோசய்யாவின் சிலைக்கு மலர்தூவி மரியாதைச் செலுத்தினர்.

இதேபோல், ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, முன்னாள் முதல்வர் வொய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி ஆகியோரும் ரோசய்யாவுக்கு மரியாதைச் செலுத்தியுள்ளனர்.

முன்னதாக, சுமார் 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் சர்ச்சைகள் அற்ற தலைவராகக் கருதப்படும் ரோசய்யா தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் ஆகிய மாநிலங்களின் ஆளுநராகப் பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

Congress leader Mallikarjuna Kharge today (July 4) unveiled the statue of former Andhra Pradesh Chief Minister Konijetti Rosaiah in Hyderabad, Telangana.

இதையும் படிக்க:கேரள முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லை!

கேரள முதல்வர் அமெரிக்கா பயணம்!

கேரள முதல்வர் பினராயி விஜயன், மருத்துவப் பரிசோதனைகளுக்காக அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள முதல்வர் பினராயி விஜயன் மேற்கொண்டு வரும் மருத்துவ சிகிச்சையின் ஒரு பகுதியாகத்... மேலும் பார்க்க

பாகிஸ்தானை விட்டு வெளியேறிய மைக்ரோசாஃப்ட்!

கராச்சி: தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட், பணியாளர்களைக் குறைப்பதற்கான உலகளாவிய உத்தியின் ஒரு பகுதியாக பாகிஸ்தானில் உள்ள தனது வரையறுக்கப்பட்ட செயல்பாடுகளை மூடுவதாக அறிவித்தது. இந்த அறிவிப்பினால் நாட... மேலும் பார்க்க

அமர்நாத்: 2 நாள்களில் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் !

தெற்கு காஷ்மீர் இமயமலையில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில் 2 நாள்களில் 20 ஆயிரம் பக்தர்கள் பனி லிங்கத்தைத் தரிசனம் செய்துள்ளனர்.இதுகுறித்து துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறுகையில், இதுவரை, தகவல்களின்படி... மேலும் பார்க்க

மொழியின் பெயரால் வன்முறை கூடாது! - ஃபட்னவீஸ் எச்சரிக்கை

மொழியின் பெயரால் வன்முறையில் ஈடுபடக்கூடாது என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் எச்சரித்துள்ளார். மேலும், மராத்தி மொழியின் பெருமைக்கான வன்முறையில் ஈடுபடுவதையும் பொறுத்துக் கொள்ள முடியாது எனவும் ... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் ஓடும் ரயிலில் இருந்து மனைவியை தள்ளிவிட்ட கணவன் !

ஜார்க்கண்டில் ஓடும் ரயிலில் இருந்து மனைவியை தள்ளிவிட்ட கணவனால் பரபரப்பு நிலவியது. ஜார்க்கண்ட் மாநிலம், பர்ககானாவிலிருந்து வாரணாசிக்கு தம்பதியினர் வாரணாசி எக்ஸ்பிரஸில் செவ்வாய்க்கிழமை கிளம்பியுள்ளனர். ... மேலும் பார்க்க

மாதவிடாய் நாப்கின்களில் ராகுல் காந்தியின் படம்! பிகாரில் புதிய சர்ச்சை!

பிகாரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் பெண்களுக்கு வழங்கப்பட்ட மாதவிடாய் நாப்கின்களில், ராகுல் காந்தியின் படம் அச்சிடப்பட்டுள்ளதற்கு, பல்வேறு அரசியல் கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். பிகாரில் காங்கிரஸ... மேலும் பார்க்க