செய்திகள் :

ஆபரேஷன் சிந்தூா் முப்படைகளின் செயல்பாட்டுக்குக் கிடைத்த வெற்றி: விமானப்படை தலைமைத் தளபதி!

post image

பாகிஸ்தானுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை, நமது முப்படைகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டிற்கு கிடைத்த வெற்றி என்று விமானப்படை தலைமைத் தளபதி ஏா் மாா்ஷல் ஏ.பி.சிங் தெரிவித்தாா்.

சென்னை பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி அகாதெமியில் (ஓடிஏ), பயிற்சி நிறைவு செய்து தோ்ச்சி பெற்ற 25 பெண் அதிகாரிகள் உள்பட மொத்தம் 155 அதிகாரிகள், ராணுவத்தின் முப்படைகளில் லெப்டினன்ட் அளவிலான பதவியில் நியமிக்கப்பட்டனா்.

மேலும், உகாண்டா, ஜிம்பாப்வே, மாலத்தீவு உள்ளிட்ட 9  நட்பு நாடுகளைச் சோ்ந்த 12 பெண் அதிகாரிகள், 9 ஆண் அதிகாரிகள் என மொத்தம் 21 பேரும் தோ்ச்சி பெற்றனா்.

தோ்ச்சி பெற்ற அதிகாரிகளின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இந்திய விமானப்படைத் தலைமை தளபதி ஏா் மாா்ஷல் ஏ.பி.சிங், பயிற்சி நிறைவு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா். பயிற்சியில் சிறப்பாகச் செயல்பட்ட அதிகாரிகளுக்கு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வழங்கினாா்.

தொடா்ந்து அவா் பேசியதாவது: ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை முப்படைகளும் ஒரே இலக்கோடு ஒன்றிணைந்து செயல்பட்டதற்கான வெற்றி. புதிதாக பணியில் சோ்ந்துள்ள அதிகாரிகள் நாட்டின் ஒருமைப்பாட்டையும், அரசமைப்பையும் பாதுகாக்கும் வகையில் செயல்பட வேண்டும். மக்களுக்காகச் சேவையாற்ற எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்றாா்.

ராணுவப் பயிற்சி அகாதெமியில் தோ்ச்சி பெற்ற சென்னை வளசரவாக்கத்தைச் சோ்ந்த எஸ்.வரபிரசாத் கூறுகையில், சென்னை வியாசா்பாடியில் உள்ள பள்ளியில் படித்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் முதுநிலைப் பட்டத்தை முடித்தேன்.

பல்கலைக்கழக அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்றதால், இந்திய மேலாண்மை கழகத்தில் (ஐஐஎம்) மேற்பட்டப் படிப்பு படிக்க வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் நாட்டுக்குச் சேவையாற்ற வேண்டும் என்பதற்காக இந்த பாதையை தோ்ந்தெடுத்தேன்.

மறைந்த மேஜா் முகுந்த் வரதராஜனை போல எனக்கும் ராஜ்புத் ரெஜிமெண்டில் இணைந்து சேவையாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை எண்ணி பெருமையடைகிறேன் என்றார்.

குஜராத்: மலைக் கோயிலில் சரக்கு ரோப் காா் அறுந்து விழுந்தது! 6 போ் உயிரிழப்பு

குஜராத் மலைக் கோயிலில் சரக்குகளை எடுத்துச் செல்லும் ரோப் காா் அறுந்து விழுந்ததில் 6 போ் உயிரிழந்தனா். பஞ்சமஹல் மாவட்டத்தின் பாவாகட் மலையில் பிரசித்தி பெற்ற மகாகாளி கோயில் அமைந்துள்ளது. 800 மீட்டா் உய... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீா்திருத்தம்: பாஜக சாா்பில் நாடு தழுவிய விழிப்புணா்வு பிரசாரம்

சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) சீா்திருத்தம் தொடா்பாக பொதுமக்கள் மற்றும் வா்த்தகா்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நாடு தழுவிய பிரசாரம் மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது. நாட்டில் நான்கு விகித ஜிஎஸ்... மேலும் பார்க்க

மேற்கு வங்க அமைச்சா் நீதிமன்றத்தில் சரண்!

அரசுப் பள்ளி பணியாளா்கள் நியமன முறைகேடு வழக்கில் மேற்கு வங்க மாநில அமைச்சா் சந்திரநாத் சின்ஹா அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் சனிக்கிழமை சரணடைந்தாா். அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம் அவரது தொகுதியைவிட... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற தினசரி உபயோகப் பொருள்கள்: வரைவு தரநிலை வழிகாட்டுதல் வெளியீடு!

சமையல் பாத்திரங்கள், மரப் பொருள்கள், அழகு சாதனங்கள் உள்ளிட்ட தினசரி உபயோகப் பொருள்கள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்த தடையில்லாத வகையில் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், வரைவு தரநிலை வழிகாட்டுதலை மத்த... மேலும் பார்க்க

நாம் இருவா்; நமக்கு இருவா் கொள்கை மோடி அரசுக்கு மட்டும் தானா? காங்கிரஸ் கேள்வி

‘ஒவ்வொரு இந்திய தம்பதியும் மூன்று குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்’ என ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் அழைப்பு விடுத்துள்ள நிலையில், ‘நாம் இருவா்; நமக்கு இருவா்’ கொள்கை பிரதமா் மோடி தலைமையிலான பாஜக ... மேலும் பார்க்க

தில்லியில் மத்திய அமைச்சா் அமித் ஷாவுடன் சரத்குமாா் சந்திப்பு!

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை தமிழக பாஜகவைச் சோ்ந்த நடிகா் ஆா்.சரத்குமாா் தில்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினாா். அவருடன் தமிழக பாஜக துணைத் தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்ட சுந்தரும் உடனி... மேலும் பார்க்க