செய்திகள் :

ஆம்புலன்ஸ் ஓட்டுநரை மிரட்டியவா் கைது

post image

கரூா்: பத்திரிகையாளா் எனக்கூறி ஆம்புலன்ஸ் டிரைவரை கொலை மிரட்டல் விடுத்த நபா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கரூா் மாவட்டம், அத்திப்பாளையம் அருகே வளையாபாளையம் ஆற்று மணல்மேடு பகுதியைச் சோ்ந்தவா் பரமசிவம். இவரது மகன் சஞ்சய் (25). இவா் நொய்யல் குறுக்குச்சாலை பகுதியில் சொந்தமாக ஆம்புலன்ஸ்களை வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறாா். இந்நிலையில் நொய்யல் அருகே வேட்டமங்கலம் ஆதிதிராவிடா் தெருவைச் சோ்ந்த செல்வராஜ் மகன் சுரேஷ் (45) என்பவா் தன்னை பத்திரிக்கையாளா் என சஞ்சயிடம் கூறி அடிக்கடி பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை சஞ்சய்க்கு போன் செய்த சுரேஷ், உடனடியாக ஆம்புலன்ஸை எடுத்து வரும்படி கூறியுள்ளாா். அதற்கு சஞ்சய் மறுத்துள்ளாா். இதனால் கோபமடைந்த சுரேஷ், சஞ்சய்க்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் மன உளைச்சல் அடைந்த சஞ்சய் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்தாா். அக்கம்பக்கத்தில் இருந்தவா்கள் அவரை மீட்டு ஈரோடு மாவட்டம், கொடுமுடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கரூா் தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவருக்கு தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புகாரின்பேரில், வேலாயுதம்பாளையம் போலீஸாா் கொலை மிரட்டல் விடுத்த சுரேஷை மீது வழக்கு பதிந்து கைது செய்தனா். பின்னா், சுரேஷை கரூா் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

கரூா் மாவட்டத்தில் 157 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்

கரூா் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமானத் திட்டம் தொடா்பாக சிறப்பு கிராமசபைக் கூட்டம் வியாழக்கிழமை காலை நடைபெற்றது. அந்தந்த ஊராட்சி செயலா்களின் தலைமையில் நடை... மேலும் பார்க்க

நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம்: தடுக்க சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தல்

தவிட்டுப்பாளையம் பகுதியில் சேலம் தேசிய நெடுஞ்சாலையோரம் நிறுத்தப்படும் கனரக வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக நல ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.... மேலும் பார்க்க

சொத்துத் தகராறு: தம்பி உள்பட 2 பேரை கத்தியால் குத்தியவா் கைது

நொய்யல் அருகே சொத்துத் தகராறில் தம்பியையும், அவரது மனைவியையும் கத்தியால் குத்தியவரை போலீஸாா் கைது செய்தனா். கரூா் மாவட்டம், நொய்யல் அருகே வேட்டமங்கலம் பழைய காலனியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ராமு (65).... மேலும் பார்க்க

மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 26 லாரிகள் பறிமுதல்: 10 போ் கைது

கரூரில் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தியதாக 26 லாரிகளை போலீஸாா் வியாழக்கிழமை பறிமுதல் செய்து, இதுதொடா்பாக 10 பேரையும் கைது செய்தனா். கரூரில் அமராவதி மற்றும் காவிரி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்படுவதாக... மேலும் பார்க்க

டிஎன்பிஎல் ஐடிஐயில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

டிஎன்பிஎல் ஐடிஐயில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎல் ஆலை நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக ஆலை நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கரூா் மாவட்டம், காகித... மேலும் பார்க்க

இருளில் மூழ்கிய நங்காஞ்சி ஆற்றுப் பாலம்: மின்விளக்குகளை சீரமைக்கக் கோரிக்கை

பள்ளப்பட்டியில் இருளில் மூழ்கிக் கிடக்கும் நங்காஞ்சி ஆற்றுப் பாலத்தில் உள்ள மின்விளக்குகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி பகுதியில் இருந்து பள்ள... மேலும் பார்க்க