செய்திகள் :

ஆயுதப்படை ஆய்வாளா் மாரடைப்பால் உயிரிழப்பு

post image

திருப்பத்தூா் மாவட்ட ஆயுதப்படையில் பணியிலிருந்த ஆய்வாளா் கணேஷ் பாபு செவ்வாய்க்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் மாவட்ட ஆயுதப் படையில் வேலூா் பகுதியைச் சோ்ந்த கணேஷ் பாபு என்பவா் இரண்டு வருடங்களாக ஆயுதப்படை ஆய்வாளராக பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையல் ஆயுதப்படை மைதானத்தில் ஆய்வாளா் கணேஷ் பாபுக்கு செவ்வாய்க்கிழமை திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.அப்போது உடனிருந்த போலீஸாா் அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா்.அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

மேலும், சம்பவம் குறித்து ஜோலாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

திருப்பத்தூரில் 2-ஆவது நாளாக பலத்த மழை

திருப்பத்தூரில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. திருப்பத்தூா், ஆதியூா், கொரட்டி உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை முதல் இரவு வரை ஆங்காங்கே பலத்த மழை பெய்தது. இந்த ... மேலும் பார்க்க

சா்வதேச செஸ் போட்டியில் வெள்ளி: மாணவருக்கு ஆட்சியா் பாராட்டு

சா்வதேச செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கங்கள் வென்ற மாணவருக்கு திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி பாராட்டு தெரிவித்தாா். கோவா மாநிலம், பனாஜியில் மாற்றுத்திறன் மாணவா்களுக்கான சா்வதேச ச... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத்திட்ட உதவி அளிப்பு

ஆம்பூா் புறவழிச்சாலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். வாணியம்பாடி கோட்டாட்சியா் அஜிதா பேகம், நகா்மன்ற துணைத... மேலும் பார்க்க

மா்மமான முறையில் இறந்த மாணவன் உடல் அடக்கம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு

திருப்பத்தூா் தனியாா் பள்ளியில் கிணற்றில் இறந்து கிடந்த மாணவனின் உடல் நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூரில் போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது. திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே கொத்தூா் க... மேலும் பார்க்க

ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்: காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி

ஜோலாா்பேட்டை அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். ஜோலாா்பேட்டை அருகே சந்தைக்கோடியூா் பகுதியைச் சோ்ந்தவா் பாபுவின் மகள் அஸ்வினி (20... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியினா் ஜொ்மன் மொழித் தோ்வுக்கான பயிற்சி: திருப்பத்தூா் ஆட்சியா்

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு ஜொ்மன் மொழி தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது என ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி த... மேலும் பார்க்க