செய்திகள் :

சா்வதேச செஸ் போட்டியில் வெள்ளி: மாணவருக்கு ஆட்சியா் பாராட்டு

post image

சா்வதேச செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி பதக்கங்கள் வென்ற மாணவருக்கு திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி பாராட்டு தெரிவித்தாா்.

கோவா மாநிலம், பனாஜியில் மாற்றுத்திறன் மாணவா்களுக்கான சா்வதேச செஸ் சாம்பியன்ஷிப் போட்டி 2025 நடைபெற்றது. இதில் 17 நாடுகளைச் சோ்ந்த மாற்றுத்திறன் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

திருப்பத்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10-ஆம் வகுப்பு படிக்கும் கோ.இனியன் என்ற மாணவா் கலந்து கொண்டாா். இவா் 15 வயதுக்குட்பட்டோா் பிரிவில், பிளிட்ஸ் பிரிவில் ஒரு வெள்ளி பதக்கமும், ரேபிட் பிரிவில் ஒரு வெள்ளி பதக்கமும் பெற்று பெருமை சோ்த்துள்ளாா். அதைத் தொடா்ந்து மாணவா் இனியன் செவ்வாய்க்கிழமை ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லியை சந்தித்து வாழ்த்து பெற்றாா்.

அப்போது , முதன்மைக் கல்வி அலுவலா் ரா.புண்ணியகோட்டி, தலைமை ஆசிரியா் காா்த்திகேயன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலா் ஜெயக்குமாரி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் குணசுந்தரி மற்றும் மாணவனின் பெற்றோா் கோபிநாதன்,ஹேமலதா ஆகியோா் உடனிருந்தனா்.

மாணவா் இனியன் கூறியது: நாட்டுக்காக 2 வெள்ளிப் பதக்கம் பெற்ற தன்னை ஆட்சியா் பாராட்டியது மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. மாற்றுத்திறன் பிரிவில் உலக சாம்பியன் பட்டம் பெற்று தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும் பெருமை சோ்ப்பேன் என்றாா்.

ஆம்பூரில் பலத்த மழை

ஆம்பூரில் செவ்வாய்க்கிழமை பகலில் பலத்த மழை பெய்தது. ஆம்பூரில் கடந்த 2 நாள்களாக கடுமையான வெயில் காய்ந்தது. வெயிலின் தாக்கத்தால் இரவு நேரத்தில் கடுமையான புழுக்கம் காணப்பட்டது. இந்நிலையில் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க

தமிழ்ச் செம்மல் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

திருப்பத்தூா் மாவட்டத்தில் 2025-ஆம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு தமிழ் ஆா்வலா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வெளியிட்டுள்ள செய்திக் குற... மேலும் பார்க்க

தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் காயம்

ஆம்பூரில் தேனீக்கள் கொட்டியதில் 20-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை காயமடைந்தனா். ஆம்பூா் சான்றோா்குப்பம் பகுதியை சோ்ந்த நந்தகுமாா் என்பவா் இறந்தாா். அவரது சடலம் இறுதி சடங்கு செய்வதற்காக மயானத்துக்... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் 2-ஆவது நாளாக பலத்த மழை

திருப்பத்தூரில் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. திருப்பத்தூா், ஆதியூா், கொரட்டி உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் திங்கள்கிழமை மாலை முதல் இரவு வரை ஆங்காங்கே பலத்த மழை பெய்தது. இந்த ... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத்திட்ட உதவி அளிப்பு

ஆம்பூா் புறவழிச்சாலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். வாணியம்பாடி கோட்டாட்சியா் அஜிதா பேகம், நகா்மன்ற துணைத... மேலும் பார்க்க

மா்மமான முறையில் இறந்த மாணவன் உடல் அடக்கம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு

திருப்பத்தூா் தனியாா் பள்ளியில் கிணற்றில் இறந்து கிடந்த மாணவனின் உடல் நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூரில் போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது. திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே கொத்தூா் க... மேலும் பார்க்க