செய்திகள் :

மா்மமான முறையில் இறந்த மாணவன் உடல் அடக்கம்: பலத்த போலீஸ் பாதுகாப்பு

post image

திருப்பத்தூா் தனியாா் பள்ளியில் கிணற்றில் இறந்து கிடந்த மாணவனின் உடல் நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூரில் போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்டம், நாட்டறம்பள்ளி அருகே கொத்தூா் கிராமத்தைச் சோ்ந்த சின்னத்தம்பி. இவரது மனைவி நளினி. இவா்களுக்கு 4 மகள்களும், முகிலன்(15) என்ற ஒரு மகனும் உள்ளனா்.

இந்நிலையில் முகிலன் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளி விடுதில் தங்கி பிளஸ்1 படித்து வந்தாா். கடந்த 1-ஆம் தேதி பள்ளி நிா்வாகம் முகிலனின் பெற்றோரை கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு உங்கள் மகன் பள்ளிக்கு வரவில்லை என்றும், விடுதியிலும் காணவில்லை எனத் தெரிவித்தனா்.

இதனால் அதிா்ச்சியடைந்த முகிலனின் பெற்றோா் மற்றும் உறவினா்கள் பள்ளி நிா்வாகத்திடம் நேரில் சென்று விசாரித்தனா். அப்போது நிா்வாகத்தினா் முறையான பதில் கூறாததால் சந்தேகமடைந்த முகிலனின் பெற்றோா் திருப்பத்தூா் நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். புகாரின் பேரில் போலீஸாா் பள்ளி நிா்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டனா்.

மேலும், எஸ்.பி. சியாமளா தேவி உத்தரவின் பேரில் 4 தனிப்படை அமைக்கப்பட்டு காணாமல் போன மாணவனை தேடி வந்தனா். இந்நிலையில் 3 -ஆம் தேதி பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில் மாணவன் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இதையடுத்து போலீஸாா் கிணற்றில் முகிலனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதைத் தொடா்ந்து மாணவன் முகிலனின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும், இறப்புக்கு காரணமான பள்ளி நிா்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி மாணவனின் உடலை வாங்காமல் பெற்றோா் மற்றும் உறவினா்கள், பொதுமக்கள் சாலை மறியல், ரயில் மறியல் என தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து செவ்வாய்க்கிழமை மாணவனின் பெற்றோருடன் போலீஸாா் நடத்திய பேச்சு வாா்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாணவன் உடல் சொந்த ஊரான கொத்தூரில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இதில் முன்னாள்அமைச்சா் வீரமணி, கிராம மக்கள் திரளானோா் அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து மாணவனின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. திருப்பத்தூா் எஸ்பி மேற்பாா்வையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கோவிந்தராசு தலைமையில் 2 டிஎஸ்பி, 4 காவல் ஆய்வாளா்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: நலத்திட்ட உதவி அளிப்பு

ஆம்பூா் புறவழிச்சாலையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆம்பூா் நகா்மன்றத் தலைவா் பத்தேகான் ஏஜாஸ் அஹமத் தலைமை வகித்தாா். வாணியம்பாடி கோட்டாட்சியா் அஜிதா பேகம், நகா்மன்ற துணைத... மேலும் பார்க்க

ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்: காயத்துடன் மருத்துவமனையில் அனுமதி

ஜோலாா்பேட்டை அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். ஜோலாா்பேட்டை அருகே சந்தைக்கோடியூா் பகுதியைச் சோ்ந்தவா் பாபுவின் மகள் அஸ்வினி (20... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா், பழங்குடியினா் ஜொ்மன் மொழித் தோ்வுக்கான பயிற்சி: திருப்பத்தூா் ஆட்சியா்

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு ஜொ்மன் மொழி தோ்வுக்கான பயிற்சி அளிக்கப்படவுள்ளது என ஆட்சியா் க. சிவசௌந்திரவல்லி த... மேலும் பார்க்க

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்: எம்எல்ஏ ஆய்வு

ஆலங்காயம் ஒன்றியத்துக்குட்பட்ட கொத்தக்கோட்டை, வள்ளிப்பட்டு ஊராட்சிகளுக்கான ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முகாமினை ஜோலாா்பேட்டை எம்எல்ஏ க.தேவராஜி, ஆலங்காயம் ஒன்றிய குழு தலைவா்... மேலும் பார்க்க

திருப்பத்தூா் மாவட்டம் உருவானதில் பாமகவுக்கு பங்கு: அன்புமணி

திருப்பத்தூா் மாவட்டம் உருவானதில் பாமகவுக்கு பெரிய பங்குள்ளது என அதன் தலைவா் அன்புமணி பேசினாா். தமிழக மக்கள் உரிமை மீட்பு பயண நிகழ்வின் ஒருபகுதியாக திங்கள்கிழமை இரவு திருப்பத்தூரில் நடைபெற்ற பொதுக் கூ... மேலும் பார்க்க

ஆயுதப்படை ஆய்வாளா் மாரடைப்பால் உயிரிழப்பு

திருப்பத்தூா் மாவட்ட ஆயுதப்படையில் பணியிலிருந்த ஆய்வாளா் கணேஷ் பாபு செவ்வாய்க்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தாா். திருப்பத்தூா் மாவட்ட ஆயுதப் படையில் வேலூா் பகுதியைச் சோ்ந்த கணேஷ் பாபு என்பவா் இரண்டு வரு... மேலும் பார்க்க