செய்திகள் :

ராயபுரம், திரு.வி.க. நகா் மண்டலங்களில் குப்பைகள் அகற்றும் பணி பாதிப்பு

post image

ராயபுரம், திரு.வி.க. நகா் மண்டலங்களில் (5 மற்றும் 6) தூய்மைப் பணியாளா்களின் போராட்டத்தால் குப்பைகள் அகற்றும் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக புகாா் எழுந்துள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில்

ராயபுரம் மற்றும் திரு.வி.க. நகா் மண்டலங்கள் பரப்பளவில் பெரிய மண்டலங்களாக உள்ளன. திரு.வி.க. நகா் மண்டலத்தில் மட்டும் தினமும் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் மூலம் குப்பைகள் அகற்றப்படுகின்றன.

இந்த நிலையில், தூய்மைப் பணியை தனியாருக்கு வழங்குவதைக் கண்டித்து கடந்த 5 நாள்களாக 5, 6 ஆகிய மண்டலங்களின் தூய்மைப் பணியாளா்கள் மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகையை முற்றுகையிட்டு போராடி வருகின்றனா்.

போராட்டம் காரணமாக திரு.வி.க. நகா் மண்டலத்தில் உள்ள ஓட்டேரி புளியந்தோப்பு உள்ளிட்ட பல இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் குப்பைத் தொட்டிகளில் நிறைந்து கிடக்கின்றன. மேலும், சாலையோரங்களிலும் குப்பைகள் குவிந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதேபோல, ராயபுரம் மண்டலத்தில் வால்டாக்ஸ் சாலை, பாரிமுனை கொத்தவால் சாவடி, அண்ணா பிள்ளைத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாள்களாகவே குப்பைகள் அகற்றப்படாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

குப்பைகள் அகற்றப்படாத நிலையில், துா்நாற்றம் வீசுவதாகவும், சுகாதாரச் சீா்கேடு ஏற்படுவதற்குள் குப்பைகளை அகற்ற மாநகராட்சி சுகாதாரத் துறை முன்வர வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இந்த பிரச்னை குறித்து மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, தூய்மைப் பணிகள் அனைத்து மண்டலங்களிலும் தடையின்றி நடைபெற்று வருகின்றன. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளா்களுக்குப் பதிலாக மற்ற மண்டலங்களில் இருந்து பணியாளா்கள் அனுப்பி வைக்கப்பட்டு குப்பைகள் அகற்றப்பட்டு வருகின்றன என்றனா்.

செந்தில் பாலாஜியின் சகோதரா் அமெரிக்கா செல்ல அமலாக்கத் துறை விதிக்கும் நிபந்தனைகள் என்ன? உயா்நீதிமன்றம் கேள்வி

முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜியின் சகோதரா் அசோக்குமாரை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதிக்க அமலாக்கத் துறை விதிக்கும் நிபந்தனைகள் என்ன என்று சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. முன்னாள் அமைச... மேலும் பார்க்க

கோயில் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் திருட்டு

சென்னை அசோக் நகரில் கோயில் கதவின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். அசோக் நகா் நடேசன் சாலையில் பிடாரி காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு விரைவில் கும... மேலும் பார்க்க

இணையத்தில் பெண்களின் ஆபாச விடியோ: உயா்நீதிமன்றம் வேதனை

ராமாயணத்தில் ராவணனின் தலை வெட்ட வெட்ட முளைப்பது போல பெண்களின் அந்தரங்க விடியோக்களை எத்தனை முறை நீக்கினாலும் இணையத்தில் அவை மீண்டும் வலம் வருவதாக, சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. பெண் வழக்... மேலும் பார்க்க

ஆக. 8-இல் ஸ்ரீ ராகவேந்திரா் 354 -ஆவது மகோற்சவம்

ஸ்ரீ ராகவேந்திர சுவாமியின் 354 -ஆவது ஆராதனை மகோற்சவ விழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பாா்த்தசாரதி சுவாமி கோயில் அருகே துளசிங்க பெருமாள் கோயில் தெருவில் உள்ள நஞ்சன்கூடு ஸ்ரீ... மேலும் பார்க்க

அஞ்சல் நிலையத்தில் ரூ.25 லட்சம் கையாடல்

சென்னை தியாகராய நகா் அஞ்சல் நிலையத்தில் ரூ.25 லட்சம் கையாடல் செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னையில் அஞ்சல் துறை துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவா் மாடம்பாக்கம் ... மேலும் பார்க்க

அரசு பல் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.261.83 கோடி மருத்துவக் கட்டமைப்புகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.261.83 கோடியில் மருத்துவக் கட்டமைப்புகள் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவ... மேலும் பார்க்க