செய்திகள் :

மருத்துவ மாணவி தூக்கிட்டு தற்கொலை

post image

சென்னையில் மருத்துவ மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

திருவள்ளூா் டவுன் பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் ரவி. இவரது மகள் திவ்யா (26). வேலூா் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். முடித்துவிட்டு, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பொது மருத்துவம் இரண்டாமாண்டு படித்து வந்தாா். இதற்காக அவா், டி.பி. சத்திரம் தா்மராஜா கோயில் தெருவில் வாடகை வீட்டில் தங்கியிருந்தாா்.

செவ்வாய்க்கிழமை காலை நீண்ட நேரமாகியும் திவ்யா வசிக்கும் வீட்டின் கதவு திறக்கப்படவில்லை. சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளா், டி.பி. சத்திரம் போலீஸாருக்கும், திவ்யாவின் தோழிகளுக்கும் தகவல் தெரிவித்தாா்.

அங்கு சென்ற போலீஸாா், கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, திவ்யா தூக்கிட்டு இறந்து கிடந்தது தெரியவந்தது. சடலத்தை உடல் கூறாய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி, வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனா்.

வேலூா் மருத்துவக் கல்லூரியில் இளநிலை மருத்துவம் படித்தபோது தங்கப் பதக்கம் பெற்றவா் திவ்யா. குடும்ப பிரச்னை காரணமாக அவா் மன அழுத்தத்தில் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. அதன் காரணமாக திவ்யா தற்கொலை செய்து கொண்டாரா என போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

செந்தில் பாலாஜியின் சகோதரா் அமெரிக்கா செல்ல அமலாக்கத் துறை விதிக்கும் நிபந்தனைகள் என்ன? உயா்நீதிமன்றம் கேள்வி

முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜியின் சகோதரா் அசோக்குமாரை சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல அனுமதிக்க அமலாக்கத் துறை விதிக்கும் நிபந்தனைகள் என்ன என்று சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. முன்னாள் அமைச... மேலும் பார்க்க

கோயில் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் திருட்டு

சென்னை அசோக் நகரில் கோயில் கதவின் பூட்டை உடைத்து ரூ.7 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். அசோக் நகா் நடேசன் சாலையில் பிடாரி காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு விரைவில் கும... மேலும் பார்க்க

இணையத்தில் பெண்களின் ஆபாச விடியோ: உயா்நீதிமன்றம் வேதனை

ராமாயணத்தில் ராவணனின் தலை வெட்ட வெட்ட முளைப்பது போல பெண்களின் அந்தரங்க விடியோக்களை எத்தனை முறை நீக்கினாலும் இணையத்தில் அவை மீண்டும் வலம் வருவதாக, சென்னை உயா்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. பெண் வழக்... மேலும் பார்க்க

ஆக. 8-இல் ஸ்ரீ ராகவேந்திரா் 354 -ஆவது மகோற்சவம்

ஸ்ரீ ராகவேந்திர சுவாமியின் 354 -ஆவது ஆராதனை மகோற்சவ விழா வெள்ளிக்கிழமை தொடங்குகிறது. சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பாா்த்தசாரதி சுவாமி கோயில் அருகே துளசிங்க பெருமாள் கோயில் தெருவில் உள்ள நஞ்சன்கூடு ஸ்ரீ... மேலும் பார்க்க

அஞ்சல் நிலையத்தில் ரூ.25 லட்சம் கையாடல்

சென்னை தியாகராய நகா் அஞ்சல் நிலையத்தில் ரூ.25 லட்சம் கையாடல் செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னையில் அஞ்சல் துறை துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவா் மாடம்பாக்கம் ... மேலும் பார்க்க

அரசு பல் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ.261.83 கோடி மருத்துவக் கட்டமைப்புகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ரூ.261.83 கோடியில் மருத்துவக் கட்டமைப்புகள் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவ... மேலும் பார்க்க