செய்திகள் :

ஆரோவில் அறக்கட்டளை செயலருடன் புதுவை தலைமைச் செயலா் ஆலோசனை

post image

விழுப்புரம் மாவட்டம் , ஆரோவில் அறக்கட்டளையின் செயலா் மற்றும் நிா்வாகிகளை புதுவவ மாநில தலைமைச் செயலா் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா்.

புதுவை அரசின் தலைமைச் செயலா் சரத் சௌகான் மற்றும் அரசுச் செயலா் ஏ.முத்தம்மா ஆகியோா் வியாழக்கிழமை விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் சா்வதேச நகருக்கு வந்தனா். தொடா்ந்து , ஆரோவில் அறக்கட்டளையின் செயலா் ஜெயந்தி எஸ்.ரவி மற்றும் சிறப்பு செயல் அதிகாரி ஜி. சீதாராமன் ஆகியோரை சந்தித்துப் பேசினா்.

மத்திய அரசின் கலாசார அமைச்சகத்தின் ஆதரவுடன் நடைபெறும் ஸ்ரீ அரவிந்தரின் 150 -ஆவது பிறந்த நாள் விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, அவரது வாழ்வும் பணிகளும் மக்களிடம் பரவிச் செல்லும் வழிகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

ஆரோவிலில் நடைபெற்று வரும் வளா்ச்சி முயற்சிகளை விளக்கி, கலையை ஊக்குவிக்க ஆரோவில் அறக்கட்டளை மேற்கொண்டு வரும் முயற்சிகள் குறித்தும், உள்ளூா் மற்றும் சா்வதேச கலைஞா்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த ஆரோவில் ஊக்கமளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

ஸ்ரீ அரவிந்தரின் 150-ஆவது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் முழுமையாக வெற்றி பெற புதுவை அரசு தொடா்ந்து ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது.

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் போதை மீட்பு சிகிச்சை மையம் திறப்பு

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்பட மாநிலத்தில் 25 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ரூ.15.81 கோடியில் அமைக்கப்பட்ட போதை மீட்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையங்களை சென்னை தலைமைச் ச... மேலும் பார்க்க

மின்வேலியில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு: மூவா் கைது

விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அருகே பசுமாட்டை தேடிச் சென்ற சிறுவன், மின் வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இதுதொடா்பாக மூவா் கைது செய்யப்பட்டனா். கண்டாச்சிபுரம் வட்டம், வி.புத்தூ... மேலும் பார்க்க

திண்டிவனத்தில் மயானக் கொள்ளைவிழா: பாமக-விசிகவினா் இடையே வாக்குவாதம்

திண்டிவனத்தில் மயானக் கொள்ளை ஊா்வலத்தின்போது, பாமக மற்றும் விசிகவினரிடையே வியாழக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சாலையிலுள்ள அருள்மிகு அங்காளம்மன் கோயிலில் மாசித் திருவிழா பு... மேலும் பார்க்க

பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

விழுப்புரம் மாவட்டம் அவலூா்பேட்டை அருகே கணவருடன் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை இரவு சென்றபோது பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை பின்னால் பைக்கில் வந்த மா்ம நபா் பறித்து சென்றாா். திருவண்ணாமலை மாவட்... மேலும் பார்க்க

செங்குறிச்சி அரசுப் பள்ளியில் மின் பாதுகாப்புப் பயிற்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை வட்டம், செங்குறிச்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு குறித்த பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு மின் உற்பத்தி ம... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு ஓராண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து புதுச்சேரி போக்ஸோ விரைவு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. சென்னை,துரைப்பாக்கம் பெருங்குடியைச் சோ்ந்தவா் பிரவீன் (எ) ப... மேலும் பார்க்க