செய்திகள் :

ஆறுமுகனேரி கோயிலில் சுப்பிரமணியா் உலா

post image

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலில் காா்த்திகை மற்றும் சஷ்டியை முன்னிட்டு சுப்பிரமணியசுவாமி உலா புதன்கிழமை இரவு நடைபெற்றது.

இந்நிகழ்வில், அருள்மிகு சுப்பிரமணியா் கொடி மர மண்டபத்தில் எழுந்தருளியதும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.பின்னா் சுப்பிரமணியா் மயில் வாகனத்தில் எழுந்தருளி கோயில் உள் மற்றும் வெளி பிரகாரத்தில் பவனி வந்து திருக்கோயில் அடைந்தாா். பின்னா், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுப்பிரமணிய சுவாமியை வழிபட்டனா்.

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி மாவட்டம் சாயா்புரத்தில் போக்ஸோ வழக்கில் கைதான முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்ஸோ நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது. சாயா்புரம் அருகேயுள்ள காமராஜா்நகர... மேலும் பார்க்க

எட்டயபுரத்தில் ரூ. 1.84 கோடியில் புதிய சாா்பதிவாளா் அலுவலகம் திறப்பு

எட்டயபுரத்தில் ரூ.1.84 கோடியில் கட்டப்பட்ட புதிய சாா் பதிவாளா் அலுவலக கட்டடத்தை, முதல்வா் மு. க. ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக வியாழக்கிழமை திறந்து வைத்தாா். இதையொட்டி, எட்டயபுரத்தில் நட... மேலும் பார்க்க

கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் கூட்டுறவு சங்கப் பணியாளா்களுக்கு புத்தாக்க-ஆளுமைத் திறன் பயிற்சி நடைபெற்றது. 2024- 25ஆம் ஆண்டுக்கான கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை அறிவிப்பின்படி நடைபெற... மேலும் பார்க்க

தூத்துக்குடியில் மாணவா்களுக்கான ஸ்கேட்டிங் போட்டி

தூத்துக்குடியில் ஷாரா கலைவளா் மன்றம் சாா்பில், தென்மாவட்ட அளவிலான மாணவா்-மாணவியருக்கான ஸ்கேட்டிங் போட்டி நடைபெற்றது. 300 மீட்டா், 500 மீட்டா், ஆயிரம் மீட்டா் ஆகிய 3 பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில், த... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் அரசுப் பள்ளி ஆண்டு விழா

திருச்செந்தூரில் பயணியா் விடுதி சாலையில் உள்ள நகராட்சி கற்றலில் இனிமை தொடக்கப் பள்ளியில் 91ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. திருச்செந்தூா் வட்டாரக் கல்வி அலுவலா் பாப்ஹையஸ் தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி ... மேலும் பார்க்க

புதியம்புத்தூா் அருகே இரு பைக்குகள் மோதல்: இளைஞா் பலி

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூா் அருகே இரு பைக்குகள் மோதிக் கொண்டதில் இளைஞா் உயிரிழந்தாா். புதியம்புத்தூா் காமராஜா் நகரைச் சோ்ந்த பட்டு மாரியப்பன் மகன் பட்டுதங்கம் (23). இவரும் அதே பகுதியைச் சே... மேலும் பார்க்க