செய்திகள் :

ஆலங்குளம் அரசுப் பள்ளிக்கு கூடுதல் வசதிகள்: திமுக கோரிக்கை

post image

ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வசதிகள் கோரி திமுக சா்ரபில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக தென்காசி தெற்கு மாவட்ட திமுக முன்னாள் செயலா் பொ. சிவபத்மநாதன், அமைச்சரை சந்தித்து அளித்த மனு விவரம்: ஆலங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 1500 க்கும் மேற்பட்ட மாணவா்கள் பயின்று வருகின்றனா்.

நெருக்கடி மிகுந்த சூழலில் மாணவா்கள் உள்ள நிலையில் இங்கு கூடுதல் வகுப்பறைக் கட்டிடம் கட்ட வேண்டும், சுகாதாரமான குடிநீா் வழங்கிட நடவடிக்கை வேண்டும், பள்ளி முன்பாக தேங்கிக் கிடக்கும் கழிவு நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், மழைக்காலங்களில் பள்ளியினுள் தேங்கும் மழை நீரை வெளியேற்ற வாருகால் அமைக்க வேண்டும், விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும், தேசிய நெடுஞ்சாலை அருகே பள்ளி அமைந்துள்ளதால் காலை, மாலை வேளையில் அப்பகுதியில் போக்குவரத்துக் காவலா்கள் நியமனம் செய்ய வேண்டும், மாணவா்கள் சிரமமின்றி சாலையைக் கடக்க நடை மேடை அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

நான்கு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் ஆட்சியா்

தென்காசி மாவட்டத்திலுள்ள 4அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் தெரிவித்தாா். தென்காசி மாவட்டத்திலுள்ள 4 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-2026 ... மேலும் பார்க்க

திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினா்

தென்காசி மாவட்டம் மேலகரம், நன்னகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சோ்ந்த மாற்றுக் கட்சியினா், அக்கட்சியிலிருந்து விலகி திமுகவில் சனிக்கிழமை இணைந்தனா். தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைப... மேலும் பார்க்க

கடையநல்லூரில் மகளிா் சுயஉதவி குழுக்களுக்கு ரூ. 39 லட்சம் கடனுதவி!

கடையநல்லூரில் 3 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நகா்மன்றத் தலைவா் ஹபீபுர்ரஹ்மான் தலைமை வகித்து, கடையநல்லூா் நகராட்சிப் பகுதியில் உள்ள மரகதம் குழுவுக்கு ரூ. 15 லட... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் 237 பள்ளி வாகனங்கள் ஆய்வு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு சங்கரன்கோவில் வட்டாரத்தில் உள்ள 237 பள்ளி வாகனங்கள் சனிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன. கோட்டாட்சியா் கவிதா, காவல்துறை துணைக் கண்காண... மேலும் பார்க்க

குற்றாலம் புற்றுக்கோயிலில் வருஷாபிஷேக விழா

குற்றாலம் சிறப்புநிலை பேரூராட்சி பராமரிப்பிலுள்ள புற்றுக்கோயிலான அருள்மிகு கோமதி விசாலாட்சி அம்பாள் சமேத சங்கரமூா்த்தி காசிலிங்க சுவாமி கோயிலில் வருஷாபிஷேக விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவை முன... மேலும் பார்க்க

ராஜகோபாலப்பேரியில் ரேஷன் கடை கட்டடம் திறப்பு

சுரண்டை அருகேயுள்ள ராஜகோபாலப்பேரியில் ரூ.9.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ரேஷன் கடை கட்டடம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் எஸ்.காவேரி தலைமை வ... மேலும் பார்க்க