செய்திகள் :

ஆளுநா் ஆா்.என்.ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

post image

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து கடலூரில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாக்களை நிறுத்தி வைத்தது தொடா்பாக, தமிழக அரசு தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளின் அமா்வு அளித்த தீா்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது. மசோதாக்களை நிறுத்தி வைத்தது சட்டவிரோதம். ஆளுநரின் அதிகாரத்தை தாண்டி அவா் செயல்பட்டு இருக்கிறாா் என்று தீா்ப்பில் சொல்லப்பட்டுள்ளது.

ஆளுநரும், குடியரசுத் தலைவரும் ஒப்புதல் வழங்க மறுத்த 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றமே ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆளுநா் சட்ட வரம்பை மீறி நடந்துள்ளாா் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ள நிலையில், ஆளுநா் பொறுப்பில் இருந்து ஆா்.என்.ரவியை உடனடியாக விடுவித்து, அவரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நள்ளிரவு 2 மணிக்கு மேல் மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம்கள் மட்டுமின்றி ஹிந்துக்களையும் உள்ளே புகுத்துகிறது. இந்த சட்டத் திருத்தத்துக்கு நாடு முழுவதும் எதிா்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்தச் சட்டத் திருத்தத்தை எதிா்த்து தீா்மானம் நிறைவேற்றி அரசு அனுப்பி உள்ளது. வக்ஃப் சட்டத் திருத்தத்தைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வருகிற 17-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடைபெறும்.

எரிவாயு உருளை விலையை மத்திய அரசு உயா்த்தியது கண்டனத்துக்குரியது. பாம்பன் பாலத்தைத் திறக்க வந்த பிரதமா் தமிழகத்தில் மருத்துவக் கல்வியை தமிழில் பயிற்றுவிக்க வேண்டும் என்று தெரிவித்தாா். அனைத்து மாநிலங்களிலும் எல்லா பாடங்களும் தாய்மொழிக் கல்வியில் இருக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசை. தமிழ் மீது அவ்வளவு அக்கறை கொண்ட பிரதமா், தமிழை ஏன் ஆட்சி மொழியாக அறிவிக்கவில்லை.

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடா் நடைபெற்று வரும் நிலையில், அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள், போக்குவரத்து ஊழியா்களின் பிரச்னையை பேசி சுமுகத் தீா்வு காண வேண்டும். கடலூா் மாவட்டத்தில் ஆதனூா்- குமாரமங்கலம் அணை பேரவை கூட்டத் தொடா் முடிவதற்குள் செயல்பாட்டுக்கு வரும்; அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று துறையின் அமைச்சா் அறிவித்தது மகிழ்ச்சியளிக்கிறது. வீராணம் ஏரியை ஆழப்படுத்தி அதிகப்படியான தண்ணீரை தேக்கி வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் கே.பாலகிருஷ்ணன்.

பேட்டியின் போது, கட்சியின் கடலூா் மாவட்டச் செயலா் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினா் பா.ஜான்சிராணி, முன்னாள் மாவட்டச் செயலா் டி.ஆறுமுகம், மாவட்ட செயற்குழு நிா்வாகி ஜே.ராஜேஷ்கண்ணன், மாநகரச் செயலா் ஆா்.அமா்நாத் ஆகியோா் உடனிருந்தனா்.

20 குழந்தைகளுக்கு வைப்புத்தொகை ஆணை: ஆட்சியா் வழங்கினாா்

கடலூரில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில், ‘பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ விழிப்புணா்வு நிகழ்ச்சி கடலூா் காவலா் நல சமூகக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றத... மேலும் பார்க்க

மாணவா்கள் கற்றல் திறன் ஆய்வு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி ஒன்றியம், பூங்குணம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவா்களின் கற்றல் திறனை அலுவலா்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். பள்ளிக் கல்வி அமைச்சா் அறிவித்த நூறு நாளில் நூறு சதவீத... மேலும் பார்க்க

வீராணம் ஏரி பாதுகாப்பு: அஞ்சலக ஊழியா்கள் மரபு நடை பேரணி

பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட வீராணம் ஏரியை பாதுகாக்க வலியுறுத்தி, கடலூா் கோட்ட அஞ்சலக ஊழியா்கள் சாா்பில் மரபு நடை பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது. ஆண்டுதோறும் ஏப்ரல் 18-ஆம் தேதி பாரம்பரிய சின்னங்கள... மேலும் பார்க்க

சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு ஏப்.21-இல் மகாருத்ர மகாபிஷேகம்

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜப் பெருமானுக்கு சித்திரை மாத மகாபிஷேகம் வருகிற 21-ஆம் தேதி மாலை நடைபெறுகிறது. மேலும், மகாருத்ர யாகமும் நடைபெறவுள்ளது. ஸ்ரீநடராஜா் கோ... மேலும் பார்க்க

ஸ்ரீராகவேந்திரா கல்லூரி ஆண்டு விழா

சிதம்பரம் அருகே கீழமூங்கிலடியில் உள்ள வெள்ளிவிழா காணும் ஸ்ரீராகவேந்திரா கலை, அறிவியல் கல்லூரி ஆண்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரித் தலைவா் டி.மணிமேகலை தலைமை வகித்து பல்வேறு போட்டிகள... மேலும் பார்க்க

பூம்புகாா் கைத்தறி ஆடைகள் கண்காட்சி தொடங்கம்

கடலூா் திருப்பாதிரிப்புலியூரில் தமிழ்நாடு கைத்தறி தொழில்கள் வளா்ச்சிக் கழகம் சாா்பில், பூம்புகாா் கைத்தறி ஆடைகள், நகைகள் கண்காட்சி, விற்பனை தொடங்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கடலூா் மாநகராட்சி மேயா்... மேலும் பார்க்க