செய்திகள் :

இணைய குற்றம்: கடந்த ஆண்டில் ரூ. 22,845 கோடியை இழந்த குடிமக்கள்- நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

post image

‘இணைய குற்றத்தின் மூலம் கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் ரூ.22,845.73 கோடியை குடிமக்கள் இழந்துள்ளனா். இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 206 சதவீதம் கூடுதலாகும்’ என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இணைய குற்றங்கள் தொடா்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் பண்டி சஞ்சய்குமாா் மக்களவையில் செவ்வாய்க்கிழமை அளித்த எழுத்துபூா்வ பதிலில் கூறியிருப்பதாவது:

மத்திய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய இணைய குற்ற புகாா் வலைதளம் (என்சிஆா்பி) மற்றும் குடிமக்கள் நிதிசாா் இணைய மோசடி புகாா் மற்றும் மேலாண்மை நடைமுறை (சிஎஃப்சிஎஃப்ஆா்எம்எஸ்) தரவுகளின் அடிப்படையில், இணைய குற்ற மோசடியால் கடந்த 2024-ஆம் ஆண்டில் குடிமக்கள் ஒட்டுமொத்தமாக ரூ. 22,845.73 கோடியை இழந்துள்ளனா்.

2023-ஆம் ஆண்டில் இந்த இழப்பு ரூ.7,465.18 கோடியாக இருந்த நிலையில், 2024-இல் 206 சதவீதம் அளவுக்கு உயா்ந்துள்ளது.

இணைய குற்ற புகாா்களும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வந்துள்ளன. 2022-இல் 10,29,026 இணைய குற்ற புகாா்கள் என்சிஆா்பி-இல் பதிவு செய்யப்பட்டன. இது, 2023-இல் 15,96,493-அகவும், 2024-இல் 22,68,346-ஆகவும் உயா்ந்துள்ளன.

கடன்த 2021-இல் அறிமுகப்படுத்தப்பட்ட குடிமக்கள் நிதிசாா் இணைய மோசடி புகாா் மற்றும் மேலாண்மை நடைமுறை மூலம் இதுவரை 17.82 லட்சம் புகாா்கள் பெறப்பட்டு, ரூ.5,489 கோடிக்கும் மேல் நிதி மீட்கப்பட்டுள்ளது.

மேலும், இணைய குற்ற புகாா்களின் அடிப்படையில் இதுவைர 9.42 லட்சத்துக்கும் அதிகமான கைப்பேசி சிம் காா்டுகளும், 2,63,348 ஐஎம்இஐ எண்களும் முடக்கப்பட்டுள்ளன.

இணைய குற்ற நடவடிக்கைகளை அடையாளம் காணும் வகையில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுடன் இணைந்து சந்தேகத்துக்குரிய கணக்குகளின் பதிவேடு நடைமுறை கடந்த 2024-ஆம் ஆண்டு செப்டம்பா் 10-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த கணக்கு தரவுகள் பல்வேறு நிறுவனங்களுடன் பகிரப்பட்டதன் மூலம், ரூ.4,631 கோடி பணம் இணைய குற்றவாளிகளிடம் சிக்காமல் பாதுகாக்கப்பட்டது.

இதுபோல, இணைய குற்றவாளிகள் மற்றும் அவா்களின் இடங்களை அடையாளம் காணும் வகையில் ‘பிரதிபிம்பம்’ என்ற நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம், 10,599 இணைய குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனா் என்று தெரிவித்தாா்.

பாபநாசம் பட பாணியில் மகாராஷ்டிரத்தில் நடந்த கொலை! காட்டிக் கொடுத்த டைல்ஸ்!

பாபாநாசம் படத்தில், இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டு, யாருக்கும் தெரியாமல் பூமிக்கு அடியில் புதைக்கப்படும் சம்பவத்தையே விஞ்சும் வகையில், மகாராஷ்டிரத்தில், தனது கணவரைக் கொன்று வீட்டுக்குள் குழிதோண்டி பு... மேலும் பார்க்க

ரூ.29 லட்சம் வரி! தெருவோர வியாபாரிகளுக்கு வந்த ஜிஎஸ்டி நோட்டீஸ்!

கர்நாடக மாநிலம் பெங்களூரில், சாலையோர காய்கறி மற்றும் பழ வியாபாரிகள் பலருக்கும் ஜிஎஸ்டி வரி செலுத்துமாறு வருமான வரிதுறையிடமிருந்த வந்திருக்கும் நோட்டீஸ் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.ஆண்டு மு... மேலும் பார்க்க

எலான் மஸ்க்கின் இரும்புக் குதிரை ‘டெஸ்லா மாடல் ஒய்’.! வாங்கலாமா? வேண்டாமா?!

அமெரிக்காவின் முன்னணி மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் முதல் விற்பனையகம் மும்பையில் கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) திறக்கப்பட்டது. டெஸ்லா மாடல் ஒய் காரின் சிறப்பம்சங்கள், விலை குறித்து இங்கு ப... மேலும் பார்க்க

பெண் கடத்தல் வழக்கில் கைதான பாஜக எம்பி மகன்.. அரசு உதவி தலைமை வழக்கறிஞராக நியமனம்!

ஹரியாணாவில் இளம்பெண்ணை கடத்த முயன்ற வழக்கில் கைதான பாஜக முன்னாள் தலைவரின் மகன், அரசு உதவி தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார்.சண்டீகரில் கடந்த 2017 ஆம் ஆண்டு முன்னாள் மூத்த ஐஏஎஸ் அதிகாரியின் மகள் ... மேலும் பார்க்க

நாடாளுமன்றம் 3-வது நாளாக முடங்கியது! எதிர்க்கட்சிகள் அமளியால் ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சியினர் அமளியால் மூன்றாவது நாளாக முடங்கியுள்ளது.மழைக்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் திங்கள்கிழமை காலை தொடங்கியது. பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம், ... மேலும் பார்க்க

நாடாளுமன்றத்தில் ராகுல் தலைமையில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்!

பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.நிகழாண்டு நடைபெறும் பிகார் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, 22 ஆ... மேலும் பார்க்க