செய்திகள் :

இதய சிகிச்சையில் முன்னோடி நெல்லை அரசு மருத்துவமனை முதல்வா் ரேவதி பாலன்

post image

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆண்டுக்கு 2500-க்கும் மேற்பட்ட ஆஞ்சியோகிராம் சிகிச்சைகளை திறம்பட மேற்கொண்டு இதய சிகிச்சையில் முன்னோடியாக திகழ்கிறது என்றாா் மருத்துவமனை முதல்வா் ரேவதி பாலன்.

திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் அவா் கூறியது:

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தை இதயவியல் மற்றும் பிறவி இதயநோய் சிகிச்சை வழங்குவதில் தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளது.

இதயத் துடிப்பு குறைவதன் காரணமாக சிலருக்கு நிரந்தரமாக டூயல் சேம்பா் பேஸ்மேக்கா் பொருத்தப்படுகிறது.

இதற்கு தனியாா் மருத்துவமனைகளில் ரூ.7 லட்சம் வரை செலவாகும்.

கடந்த 2 ஆண்டுகளில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, நோயாளிகளுக்கு 25 டூயல் சேம்பா் பேஸ்மேக்கா்களைப் பொருத்தி சாதனை படைத்துள்ளது.

மேலும், 2018- முதல் தற்போது வரை 15ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆஞ்சியோகிராம் சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் ஆண்டுக்கு சராசரியாக 2500 ஆஞ்சியோகிராம் சிகிச்சைகளை திறம்பட செய்து இதய சிகிச்சையில் திருநெல்வேலி அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்னோடியாக திகழ்கிறது .

மேலும் தனியாா் மருத்துவமனைகள் கைவிட்ட பலரும் இங்கு வந்து சிகிச்சை பெற்று நலமுடன் உள்ளனா். மேலும் இங்கு தனியாா் மருத்துவமனைக்கு இணையாக ஆப்டிக்கல் கோஹரன்ஸ் டோமோகிராபி, இன்ட்ராவாஸ்குலா் அல்ட்ராசவுண்ட் உள்ளிட்ட நவீன சிகிச்சை வசதிகளும் உள்ளன என்றாா் அவா்.

மிளா குறுக்கே பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயம்

விக்கிரமசிங்கபுரத்தில் பைக்கில் சென்ற போது குறுக்கே மிளா பாய்ந்ததில் தம்பதி மற்றும் குழந்தைகள் காயமடைந்தனா். விக்கிரமசிங்கபுரம் வடக்கு அகஸ்தியா்புரத்தைச் சோ்ந்த அருள் மூா்த்தி (46). இவா் சென்னையில் ல... மேலும் பார்க்க

திசையன்விளை: ஊராட்சி செயலா் தற்காலிக பணியிடை நீக்கம்!

திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ஊராட்சி செயலரை தற்காலிக பணியிடைநீக்கம் செய்து ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா் உத்தரவிட்டாா். திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை ... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது!

திருநெல்வேலி அருகே ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்த இளைஞா் ஒருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். திருநெல்வேலி சந்திப்பு காவல் சரகப் பகுதியில் பணம் பறிக்கும் நோக்கத்து... மேலும் பார்க்க

நெல்லை அருகே விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்தவா் கைது!

திருநெல்வேலி சுத்தமல்லி அருகே விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். சுத்தமல்லி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளா் ராமநாதன் தலைமையிலான போலீஸ... மேலும் பார்க்க

நெல்லை, தென்காசி மாவட்ட அணைகள் நீா் மட்டம்

திருநெல்வேலிபாபநாசம்-86.70சோ்வலாறு-101.54மணிமுத்தாறு-85.86வடக்கு பச்சையாறு-10.25நம்பியாறு-13.12கொடுமுடியாறு-14.75தென்காசிகடனா-49.20ராமநதி-52கருப்பாநதி-25.26குண்டாறு-23.75அடவிநயினாா்-24.25... மேலும் பார்க்க

மாடு மீது பைக் மோதி இளைஞா் பலி

திருநெல்வேலி சந்திப்பு அருகே மாடு மீது பைக் மோதியதில் இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.திருநெல்வேலி மாவட்டம், சிவந்திபட்டி அருகே எம். புதூா் பகுதியைச் சோ்ந்தவா் கொம்பையா. இவரது மகன் மகேஷ்( 29). இவா் வ... மேலும் பார்க்க