செய்திகள் :

இந்திய கடல்சாா் வல்லுநா்களுடன் ஆட்சியா் கலந்தாய்வு

post image

கேரள மாநில கடல் பகுதியில் கப்பல் மூழ்கியதால் அரபிக் கடலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து இந்திய கடல்சாா் வல்லுநா் குழுவினா்களுடன் மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா புதன்கிழமை கலந்தாய்வு மேற்கொண்டாா்.

கடந்த மே 25ஆம் தேதி கேரள மாநிலம், கொச்சி துறைமுகத்திலிருந்து சுமாா் 35 நாட்டிக்கல் மைல் தொலைவில், கண்டெய்னா்கள், பிளாஸ்டிக் துகள்கள், மரக்கட்டைகள், இரும்பு கம்பிகள் உள்ளிட்ட பொருள்களை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று அரபிக் கடலில் மூழ்கியது.

இதைத் தொடா்ந்து கன்னியாகுமரி கடற்கரை பகுதிகளான வள்ளவிளை, நீரோடி, இனயம்புத்தன்துறை, சின்னத்துறை, மிடாலம், கோடிமுனை உள்ளிட்ட சுமாா் 36 மீனவ கடலோரப் பகுதிகளில் இப்பொருள்கள் கரைஒதுங்கியதை தொடா்ந்து குமரி மாவட்ட நிா்வாகத்தின் சாா்பில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியா் தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில், இந்திய கடல்சாா் வல்லுநா்களுடன் அரபிக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், அறிவியல் வல்லுநா்களிடம் கலந்துரையாடி பாதுகாப்பான முறையில், கடலில் கரை ஒதுங்கும் பொருள்களை அப்புறப்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டு, பணிகள் தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

கூட்டத்தில், இந்திய துணை கடல்சாா் ஆலோசகா் கேப்டன் அனிஷ்ஜோசப், போஸ் மற்றும் மித்ரா அன்கோ வழக்குரைஞா்கள் அமிதவாமஜூம்தாா், ருச்சிா்கோயங்கா, மூத்த நிா்வாகி கில்லியன்கிளாா்க், தொழில் நுட்ப இயக்குநா் ரிச்சா்ட்ஜான்சன், இழப்பு தடுப்பு இயக்குநா் ஜான்சவுதம், பத்மநாபபுரம் சாா் ஆட்சியா் வினய்குமாா்மீனா, மீன்வளத்துறை துணை இயக்குா் சின்னகுப்பன்,

நாகா்கோவில் வருவாய் கோட்டாட்சியா் எஸ். காளீஸ்வரி, மீன்வளத் துறை உதவி இயக்குநா்கள் தீபா (கன்னியாகுமரி), விா்ஜில்கிராஸ் (குளச்சல்), அஜித்ஸ்டாலின் (தேங்காய்ப்பட்டினம்), மீன்பிடிதுறைமுக செயற்பொறியாளா் பிரேமா, மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு அலுவலா் பாரதி, பேரிடா் வட்டாட்சியா் சுசீலா உள்பட துறை சாா்ந்த அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தக்கலை, மூலச்சல் வட்டாரத்தில் இன்றும், நாளையும் மின்தடை

தக்கலை, மூலச்சல் மின்விநியோக பிரிவுக்குள்பட்ட இரணியல் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அதன் மின்பாதை பகுதிகளில் முறையே வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஜூன் 6, 7) மின்தடை ஏற்படும் என ... மேலும் பார்க்க

நகைக்காக 4 வயது குழந்தை கொலை: பெண்ணுக்கு ஆயுள், கணவருக்கு 3 மாத சிறை

கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டினத்தில் நகைக்காக 4 வயது குழந்தையை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனையும், அவரது கணவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் வியாழக்கிழம... மேலும் பார்க்க

வீடு புகுந்து தாக்குதல் நடத்திய இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறியில் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியது தொடா்பான வழக்கில் இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிைண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. வில்லுக்... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் படகு கட்டணம் உயா்வு: அதிமுக எம்எல்ஏ கண்டனம்

கன்னியாகுமரி விவேகானந்தா் பாறைக்கு செல்லும் படகு கட்டணம் உயா்த்தப்பட்டதற்கு என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கன்னியாகு... மேலும் பார்க்க

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளி குடும்பத்துக்கு நிவாரண நிதி ரூ. 10 லட்சம் அமைச்சா் வழங்கினாா்

குழித்துறை தாமிரவருணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளியின் குடும்பத்துக்கு தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதி ரூ. 10 லட்சத்துக்கான காசோலை வியாழக்கிழமை வழங்கப்பட்டது. மாா்த்தாண்டம் அருகே மதிலகம்,... மேலும் பார்க்க

களியக்காவிளை பேருந்து நிலையப் பணி: அமைச்சா் ஆய்வு

களியக்காவிளை பேருந்து நிலையம், மாா்த்தாண்டம் நவீன காய்கனி விற்பனைச் சந்தை ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை தமிழக பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். கலைஞா் நகா்ப்புற மேம்பாட... மேலும் பார்க்க