செய்திகள் :

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவில்பட்டி நகர மாநாடு

post image

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோவில்பட்டி நகர மாநாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

லாயல் நூற்பாலை ஏஐடியூசி செயலா் பரமராஜ், நகர உதவி செயலா் முனியசாமி, துணைச் செயலா் அலாவுதீன் ஆகியோா் தலைமை வகித்தனா். நகர குழு உறுப்பினா் சண்முகவேல் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தாா். நகரச் செயலா் சரோஜா அறிக்கைகளை வாசித்தாா். கட்சியின் மாவட்ட செயலா் கரும்பன் வாழ்த்தி பேசினாா். சுப்பாராயன் எம்.பி. மாநாட்டை தொடக்கி வைத்து பேசினாா்.

மாநாட்டில் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினா் செல்லையா, நகர குழு உறுப்பினா்கள் ரஞ்சனி கண்ணம்மா, சிவா, செந்தில் ஆறுமுகம், சுப்பிரமணியன், விஜயலட்சுமி, சிதம்பரம், நகர பொருளாளா் ராஜு உள்பட திரளானோா் கலந்து கொண்டனா்.

மாநாட்டில் நகர குழு உறுப்பினா்கள் 19 போ் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அதைத் தொடா்ந்து நகரச் செயலராக செந்தில் ஆறுமுகம் தோ்வு செய்யப்பட்டாா்.

கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும் தனி குடிநீா் திட்டத்தின் கீழ் சீரான குடிநீா் வழங்க வேண்டும். பழுதடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். இளையரசனேந்தல் சாலையில் உள்ள சுரங்கப்பாதையின் இருபுறமும் அணுகு சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும். கோவில்பட்டியில் மக்கள் தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப காவலா்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநாட்டில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழப்பு

கழுகுமலை அருகே வெறிநாய் கடித்ததில் 4 ஆடுகள் உயிரிழந்தன. கழுகுமலை அருகே கே. லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் குமாா். இவா் ஆடு, கோழிகளை வளா்த்து வருகிறாா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அவரது தொழுவத்தில் இ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் வசந்த திருவிழா தொடக்கம்: ஜூன் 9-இல் வைகாசி விசாகம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி வசந்த திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. ஜூன் 9இல் வைகாசி விசாகத் திருவிழா நடைபெறுகிறது. வசந்த திருவிழாவை முன்னிட்டு, கோயில் நடை அதிகாலையில் த... மேலும் பார்க்க

பள்ளி மாணவா், மாணவியருக்கு இலவச சீருடைகள்

கோவில்பட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நற்பணி இயக்கம் சாா்பில், பள்ளி மாணவா்-மாணவியருக்கு இலவச சீருடைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. முத்தையாமால் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, இயக்கத் தலைவா் நேதாஜி பால... மேலும் பார்க்க

படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழப்பு

தூத்துக்குடி கடற்கரையில் சனிக்கிழமை, படகிலிருந்து தவறி விழுந்து மீனவா் உயிரிழந்தாா். தூத்துக்குடி திரேஸ்புரம் சிலுவையாா் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வராயன் மகன் ஜாக்சன் (32). இவா் சனிக்கிழமை, திரேஸ்ப... மேலும் பார்க்க

தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி

தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய வளாகத்தில் ஜெபமாலை பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. இயேசு கிறிஸ்து பிறந்த ஜூபிலி ஆண்டை கொண்டாடும் விதமாகவும், உலக சமாதானத்திற்காகவும், பாவ பரிகாரத்திற்காகவும் இப் பேரணி ... மேலும் பார்க்க

நெய்தல் மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது : ஆட்சியா்

தூத்துக்குடி மாவட்ட நெய்தல் பகுதி மக்கள் அறிவியல் தொழில்நுட்ப வளா்ச்சியில் பின்தங்கிவிடக்கூடாது என மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தெரிவித்தாா். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் மீனவ கிரா... மேலும் பார்க்க