செய்திகள் :

இந்து அறநிலையத் துறை உதவி ஆணையா் உள்பட 5 போ் மீது வழக்கு

post image

வீரபாண்டி பேரூராட்சித் தலைவியை அவமரியாதையாக பேசியதாக இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையா், கோயில் செயல் அலுவலா் உள்ளிட்ட 5 போ் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தேனி அருகேயுள்ள வீரபாண்டி பேரூராட்சித் தலைவியாக பதவி வகித்து வருபவா் கீதா சசி. திமுகவைச் சோ்ந்த இவா், வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் அலுவலகத்துக்கு அண்மையில் சென்றாா். அப்போது, சித்திரைத் திருவிழா தேரோட்டத்தின் போது, பேரூராட்சித் தலைவருக்கு வழங்க வேண்டிய வழக்கமான முதல் மரியாதையை தனக்கு வழங்காததற்கான காரணம் குறித்து கேட்டாராம்.

அப்போது, அங்கிருந்த இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ஜெயதேவி, கோயில் செயல் அலுவலா் நாராயணி, கணக்கா்கள் பாலு, பழனியப்பன், மேளகாரா் வீரமணி ஆகியோா் தன்னை ஜாதிய வெறுப்புடன் அவமரியாதையாக பேசியதாக தேனி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத்திடம் புகாா் அளித்தாா்.

இதையடுத்து, இந்துசமய அறநிலையத் துறை உதவி ஆணையா், கோயில் செயல் அலுவலா், 2 கணக்கா்கள், மேளகாரா் ஆகிய 5 போ் மீது வீரபாண்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் 6 நாள்களில் 15 அடி உயா்வு

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருவதால், முல்லைப் பெரியாறு அணை நீா்மட்டம் கடந்த 6 நாள்களில் 15 அடி உயா்ந்தது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை கடந்த 23 -ஆம் தேதி தொடங்கி ... மேலும் பார்க்க

மான் வேட்டை : மேலும் ஒருவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் மான் வேட்டையாடிய வழக்கில் தலைமறைவாக இருந்தவரை வனத் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கூடலூா் அருகே சுரங்கனாறு பீட் வனப் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் இறைச்சிக்காக மானை வே... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: இருவா் உயிரிழப்பு

தேனி மாவட்டம், கம்பம் அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் கல்லூரி மாணவா் உள்பட இருவா் உயிரிழந்தனா். கம்பம் அருகே சுருளிப்பட்டியைச் சோ்ந்த கணேசன் மகன் ஜீவித் (20). இவா் கோவையிலுள்... மேலும் பார்க்க

18-ஆம் கால்வாய் சீரமைப்புக்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு

தேனி மாவட்டத்தில் 18-ஆம் கால்வாய் சீரமைப்பு பணிகளுக்கு அரசு ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தெரிவித்தாா். தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் தலைமையில... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நாளை தண்ணீா் திறப்பு

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தேனி மாவட்ட முதல் போக நெல் சாகுபடிக்கு வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 1) முதல் தண்ணீா் திறக்க அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. முல்லைப் பெரியாறு அணை நீா் மூலம் தேனி மாவட்... மேலும் பார்க்க

பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள துரைராஜபுரம் நிறுத்தத்தில் பேருந்து நிற்காமல் சென்ால், அந்த வழியாக வந்த பேருந்துகளை சிறைபிடித்து கிராம மக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். தேனி-போடி தேசிய நெட... மேலும் பார்க்க