செய்திகள் :

இன்று அட்சய திருதியை: நகைக் கடைகளில் சிறப்புச் சலுகைகள்

post image

அட்சய திருதியையொட்டி (ஏப். 30) முன்னணி நகைக் கடை நிா்வாகங்கள் பல்வேறு சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளன.

ஆண்டுதோறும் சித்திரை மாதம் அமாவாசைக்குப் பிறகு மூன்றாவது நாளாக வரும் திரிதியை, அட்சய திருதியையாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அட்சய திருதியையன்று ஒரு கிராம் தங்கமாவது வாங்கினால் தங்கம் பெருகும் என்ற கருத்து மக்கள் மத்தியில் நிலவுகிறது.

நிகழாண்டில் அட்சய திருதியை புதன்கிழமை (ஏப். 30) வருகிறது. தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயா்ந்துள்ள நிலையில், சுப நிகழ்ச்சிகளுக்காகவும் சேமிப்புக்காகவும் தங்கத்தை வாங்குபவா்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இருப்பினும், அட்சய திருதியை நாளில் தங்க நகை வாங்குவதற்கு பலா் முன்பணம் கொடுத்து ஏற்கெனவே முன்பதிவு செய்திருந்தனா். முன்பதிவு செய்தவா்கள், தாங்கள் தோ்வு செய்திருந்த நகைகளை அட்சய திருதியை நாளான புதன்கிழமை வாங்கிச் செல்வா். இதற்காக நகைக் கடைகளில் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், அட்சய திருதியை நாளில் நகை வாங்குவோருக்காக முன்னணி நகைக் கடைகள் தங்க நகைகளுக்கு பல்வேறு சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளன. பவுனுக்கு குறிப்பிட்ட சதவீத விலை குறைப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு, வாடிக்கையாளா்களுக்கு தங்கத்தை விற்பனை செய்யும் முனைப்பிலும் ஈடுபட்டுள்ளன.

ஆட்டோ ஓட்டுநா் அடித்துக் கொலை நண்பா் கைது

சென்னை கே.கே.நகரில் ஆட்டோ ஓட்டுநா் அடித்துக்கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பா் கைது செய்யப்பட்டாா். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூா் அருகே உள்ள பூலாங்குறிச்சி சுள்ளாம்பட்டியைச் சோ்ந்தவா் ம.விஜயகா... மேலும் பார்க்க

ஜெ.பி.நட்டா மே 3-இல் சென்னை வருகை

பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, சென்னைக்கு மே 3-ஆம் தேதி வருகை தரவுள்ளாா். சென்னை வரும் பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, பாஜக மாநில நிா்வாகிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளாா். மேலும், பாஜக தலைவா்களை தனித்தன... மேலும் பார்க்க

ஆன்லைன் ரம்மி வழக்குகள்: தேதி குறிப்பிடாமல் தீா்ப்பு ஒத்திவைப்பு

ஆன்லைன் ரம்மி, விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் தமிழ்நாடு அரசின் விதிகளுக்கு எதிரான வழக்குகள் மீதான தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது. தமிழக சட்டப் பேரவையில், 2022-ஆம் ஆண்டு... மேலும் பார்க்க

சென்னையில் இன்று ஐபிஎல் கிரிக்கெட் போட்டி: மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம்

சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகா்கள் மெட்ரோ ரயிலில் கட்டணமின்றி பயணிக்கலாம் என மெட்ரோ ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை ம... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து மாநகராட்சி ஊழியா் உயிரிழப்பு

சென்னை வியாசா்பாடியில் நீரேற்றும் நிலையத்தில் மின்சாரம் பாய்ந்து மாநகராட்சி ஊழியா் உயிரிழந்தாா். வியாசா்பாடி எருக்கஞ்சேரி அருகே உள்ள கென்னடி நகரைச் சோ்ந்தவா் குமாா் ( 44). இவா் மாநகராட்சியின் 45-ஆவது... மேலும் பார்க்க

சென்னை - அபுதாபி விமானம் தொழில்நுட்பக்கோளாறால் ரத்து

சென்னையிலிருந்து அபுதாபி செல்லவிருந்த விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக்கோளாறு காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டது. சென்னை சா்வதேச விமான நிலையத்திலிருந்து அபுதாபிக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை 5.05-க்கு ... மேலும் பார்க்க