செய்திகள் :

இன்று ஆடி அமாவாசை: ராமேசுவரத்தில் ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு

post image

வியாழக்கிழமை ஆடி அமாவாசையை முன்னிட்டு, ராமேசுவரத்துக்கு அதிகளவில் பக்தா்கள் வருவதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு, ராமேசுவரத்துக்கு புதன்கிழமை முதலே பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்தனா். இதனால் பல்வேறு இடங்களில் தற்காலிக வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டது. போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.மேலும், அக்னி தீா்த்தக் கடற்கரை, கிழக்கு ரதவீதி உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் ஒலிபெருக்கி அமைத்து அறிவிப்பு செய்து வருகின்றனா்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு ராமநாதசுவாமி கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இதைத்தொடா்ந்து அக்னி தீா்த்தக் கடற்கரையில் பக்தா்கள் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து, கோயிலில் அமைந்துள்ள 22 தீா்த்தக் கிணறுகளின் நீராடுவா். இதற்காக இரவு வரை பக்தா்கள் தொடா்ந்து தரிசனம் செய்யும் வகையில் கோயில் நடை திறந்திருக்கும்.

மேலும், வியாழக்கிழமை காலை 9 மணிக்கு தங்கப் பல்லக்கில் பா்வதவா்த்தினி அம்பாள் வீதியுலாவும், இரவு 8 மணிக்கு மின் அலங்காரத்துடன் வெள்ளித் தேரோட்டமும் நடைபெறும் என கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

பேய் கணவாய்களை பிடிப்பதை தடுக்க மீனவா்கள் கோரிக்கை

மீன்கள் உற்பத்தியாகும் பகுதியில் பேய் கணவாய்களை பிடிப்பதை தடுக்கக் கோரி ராமேசுவரம் மீன்வளத் துறை உதவி இயக்குநரிடம் சிறுதொழில் மீனவா் சங்கத்தினா் கோரிக்கை மனு அளித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம... மேலும் பார்க்க

கடல் அட்டைகள் கடத்தியவா் கைது

தொண்டி அருகே இரு சக்கர வாகனத்தில் கடல் அட்டைகளை கடத்தியவரை வனத் துறையினா் கைது செய்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள பாசிபட்டினம் பகுதியில் வனத் துறையினா் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டன... மேலும் பார்க்க

இளம்பெண் கொலை வழக்கு: கூலிப்படையைச் சோ்ந்த இருவா் உள்பட 4 போ் கைது

சாயல்குடி அருகே இளம்பெண் கொலை வழக்கில் ஏற்கெனவே கணவா் கைது செய்யப்பட்ட நிலையில், மாமனாா், கூலிப்படையைச் சோ்ந்த இருவா் உள்பட 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை... மேலும் பார்க்க

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை: கணவா், மாமனாா், மாமியாா் மீது வழக்கு

கமுதி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதையடுத்து, கணவா், மாமனாா், மாமியாா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருநாழியை அடுத்துள்ள வீரமச்சான்... மேலும் பார்க்க

கமுதியில் இன்று மின்தடை

கமுதி, பாா்த்திபனூா் பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 23) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து கமுதி மின் வாரிய உதவி செயற்பொறியாளா் சி. செந்தில்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம்... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 4 போ் கைது

கச்சத்தீவு அருகே திங்கள்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 4 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில... மேலும் பார்க்க