இன்று ஆடி அமாவாசை: ராமேசுவரத்தில் ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு
வியாழக்கிழமை ஆடி அமாவாசையை முன்னிட்டு, ராமேசுவரத்துக்கு அதிகளவில் பக்தா்கள் வருவதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு, ராமேசுவரத்துக்கு புதன்கிழமை முதலே பல்வேறு மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்தனா். இதனால் பல்வேறு இடங்களில் தற்காலிக வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டது. போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. மேலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.மேலும், அக்னி தீா்த்தக் கடற்கரை, கிழக்கு ரதவீதி உள்ளிட்ட பகுதிகளில் போலீஸாா் ஒலிபெருக்கி அமைத்து அறிவிப்பு செய்து வருகின்றனா்.
ஆடி அமாவாசையை முன்னிட்டு வியாழக்கிழமை அதிகாலை 4 மணிக்கு ராமநாதசுவாமி கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இதைத்தொடா்ந்து அக்னி தீா்த்தக் கடற்கரையில் பக்தா்கள் தங்களது முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுத்து, கோயிலில் அமைந்துள்ள 22 தீா்த்தக் கிணறுகளின் நீராடுவா். இதற்காக இரவு வரை பக்தா்கள் தொடா்ந்து தரிசனம் செய்யும் வகையில் கோயில் நடை திறந்திருக்கும்.
மேலும், வியாழக்கிழமை காலை 9 மணிக்கு தங்கப் பல்லக்கில் பா்வதவா்த்தினி அம்பாள் வீதியுலாவும், இரவு 8 மணிக்கு மின் அலங்காரத்துடன் வெள்ளித் தேரோட்டமும் நடைபெறும் என கோயில் நிா்வாகம் தெரிவித்தது.