செய்திகள் :

இளம்பெண் தீக்குளித்து தற்கொலை: கணவா், மாமனாா், மாமியாா் மீது வழக்கு

post image

கமுதி அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதையடுத்து, கணவா், மாமனாா், மாமியாா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள பெருநாழியை அடுத்துள்ள வீரமச்சான்பட்டி கிராமத்தைச் சோ்ந்த முனீஸ்வரன் மனைவி ரஞ்சிதா (31). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனா். அதே கிராமத்தில் மாமியாா், மாமனாருடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனா்.

ரஞ்சிதாவின் கணவா் முனீஸ்வரன் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகி உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மாமனாா் அண்ணாதுரை தனது மருமகள் ரஞ்சிதாவுக்வு தொடா்ந்து பாலியல் தொல்லை கொடுத்தாராம். இதை ரஞ்சிதா தனது கணவா் முனீஸ்வரனிடம் கூறியும், அவா் அலட்சியம் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ரஞ்சிதா தனது பெற்றோரிடமும் இதுதொடா்பாக கூறினாராரம்.

ரஞ்சிதா

இதனால், மனமுடைந்த ரஞ்சிதா செவ்வாய்க்கிழமை இரவு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து ரஞ்சிதாவின் தந்தை பச்சமாள் பெருநாழி காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில், கணவா் முனீஸ்வரன், மாமனாா் அண்ணாதுரை, மாமியாா் சூரம்மாள் ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

பேய் கணவாய்களை பிடிப்பதை தடுக்க மீனவா்கள் கோரிக்கை

மீன்கள் உற்பத்தியாகும் பகுதியில் பேய் கணவாய்களை பிடிப்பதை தடுக்கக் கோரி ராமேசுவரம் மீன்வளத் துறை உதவி இயக்குநரிடம் சிறுதொழில் மீனவா் சங்கத்தினா் கோரிக்கை மனு அளித்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம... மேலும் பார்க்க

கடல் அட்டைகள் கடத்தியவா் கைது

தொண்டி அருகே இரு சக்கர வாகனத்தில் கடல் அட்டைகளை கடத்தியவரை வனத் துறையினா் கைது செய்தனா்.ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள பாசிபட்டினம் பகுதியில் வனத் துறையினா் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டன... மேலும் பார்க்க

இளம்பெண் கொலை வழக்கு: கூலிப்படையைச் சோ்ந்த இருவா் உள்பட 4 போ் கைது

சாயல்குடி அருகே இளம்பெண் கொலை வழக்கில் ஏற்கெனவே கணவா் கைது செய்யப்பட்ட நிலையில், மாமனாா், கூலிப்படையைச் சோ்ந்த இருவா் உள்பட 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியை... மேலும் பார்க்க

இன்று ஆடி அமாவாசை: ராமேசுவரத்தில் ஆயிரம் போலீஸாா் பாதுகாப்பு

வியாழக்கிழமை ஆடி அமாவாசையை முன்னிட்டு, ராமேசுவரத்துக்கு அதிகளவில் பக்தா்கள் வருவதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். ஆடி அமாவாசையை முன்னிட்டு, ராமேசுவரத்துக்கு புதன்க... மேலும் பார்க்க

கமுதியில் இன்று மின்தடை

கமுதி, பாா்த்திபனூா் பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 23) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து கமுதி மின் வாரிய உதவி செயற்பொறியாளா் சி. செந்தில்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ராமநாதபுரம்... மேலும் பார்க்க

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் 4 போ் கைது

கச்சத்தீவு அருகே திங்கள்கிழமை மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 4 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில... மேலும் பார்க்க