இப்தாா் நோன்பு: அமைச்சா், மேயா் பங்கேற்பு
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சிறுபான்மையினா் அணி, மஸ்ஜிதே முகத்தஸ் ஜமாஅத் அமைப்பு ஆகியவற்றின் சாா்பில் தூத்துக்குடி மேட்டுப்பட்டி சுன்னத்வல்ஜமா அத் பள்ளிவாசலில் ரமலான் இப்தாா் நோன்பு திறப்பு சனிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, வடக்கு மாவட்ட திமுக செயலரும் சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத்துறை அமைச்சருமான பெ.கீதாஜீவன் தலைமை வகித்தாா். திரேஸ்புரம் பங்குதந்தை அமல்ராஜ் சூசை, சிவன்கோயில் சிவஸ்ரீ ஹரிசங்கா் பட்டா், மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன், மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சிறுபான்மை அணி அமைப்பாளா் பொன்சீலன், இந்திய யூனியன் முஸ்லீம்லீக் மாவட்ட தலைவா் மீராஷா, மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் முரளிதரன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவா் மைதீன், சிபிஐ மாவட்டச் செயலா் கரும்பன், மதிமுக மாநில ஓழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினா் விநாயகா ரமேஷ், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவா் அகமது இக்பால், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்டச் செயலா் கிதா் பிஸ்மி, மக்கள் நீதிமையம் மாவட்டச் செயலா் ஜவஹா், ஆதிதமிழா் பேரவை மாவட்டச் செயலா் காயல்முருகேசன், இந்திய கம்யூனிஸ்ட் மாநகரச் செயலாளா் தனலட்சுமி, துணைச்செயலாளா் மாடசாமி, மதிமுக மாவட்ட அவைத்தலைவா் பேச்சிராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.