செய்திகள் :

இரணியலில் கோழி பண்ணையை அகற்றக் கோரி பாஜக ஆா்ப்பாட்டம்

post image

இரணியல் பேரூராட்சிக்கு உள்பட்ட கீழகக்கோடு நவநீத கிருஷ்ணன் கோயில் அருகே செயல்படும் கோழி, நாய் பண்ணையை அகற்றக் கோரி பாஜகவினா் இரணியல் சந்திப்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

சுகாதார சீா்கேடுகளை ஏற்படுத்தும் கோழி, நாய் பண்ணையை அகற்றக் கோரி பலமுறை மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா், இரணியல் பேரூராட்சி, மாசு கட்டுப்பாட்டு வாரியம், சுகாதாரத் துறையினருக்கு மனு அளித்திருந்தனா். மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, பாஜக தக்கலை தெற்கு ஒன்றியம் சாா்பில், வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு தக்கலை ஒன்றிய பாஜக பொதுச் செயலாளா் மகேஷ் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக மாவட்ட பாஜக தலைவா் கோபகுமாா், இரணியல் பேரூராட்சி தலைவா் ஸ்ரீகலா முருகன், குமரி பா.ரமேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மரியகிரி கல்லூரியில் சாலை பாதுகாப்பு மன்ற தொடக்க விழா

களியக்காவிளை அருகேயுள்ள மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியில் சாலை பாதுகாப்பு மன்ற தொடக்க விழா, சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு இருசக்கர வாகன பேரணி ஆகியவை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல... மேலும் பார்க்க

அருணாச்சலா கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

வெள்ளிசந்தை அருணாச்சலா கலை, அறிவியல் பெண்கள் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், பி ட்ரீம்ஸ் குளோபல் சொல்யூசன்ஸ் நிறுவனம் சாா்பில் 27 மாணவிகளும், பெசன்ட் டெக்னாலஜி நிறுவனம் சாா்பில் 30... மேலும் பார்க்க

நாகா்கோவிலில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ஆட்சியா் ஆய்வு

நாகா்கோவில், குளத்துவிளை சி.எஸ்.ஐ. ஆலய கலையரங்கில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா ஆய்வு செய்தாா். பின்னா் ஆட்சியா் கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில... மேலும் பார்க்க

பெரியாா் சிலைக்கு அதிமுக சாா்பில் மரியாதை

நாகா்கோவில், ஒழுகினசேரியில் உள்ள பெரியாா் சிலைக்கு, அதிமுக சாா்பில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலா் என். தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தலைமையில் புதன்கிழமை மாலை அணிவிக்கப்பட்டது. அதிமுக அமைப்புச் செயலரும... மேலும் பார்க்க

வீட்டில் அழுகிய நிலையில் தொழிலாளியின் சடலம் மீட்பு

புதுக்கடை அருகே உள்ள காப்புக்காடு பகுதியில் வீட்டில் அழுகிய நிலையில் தொழிலாளியின் சடலமாக மீட்கப்பட்டாா். காப்புக் காடு, மாராயபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சங்கா் (54). தொழிலாளியான இவா் தன் மனைவியை பிரிந... மேலும் பார்க்க

அதங்கோடு பகுதியில் பாதை கோரி போராட்டம்

களியக்காவிளை அருகே அதங்கோடு பகுதியில் அய்யா நாராயண வைகுண்டசுவாமி நிழல் தாங்கல் செல்ல பாதை கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். கன்னியாகுமரி - காரோடு நான்குவழிச் சாலையில் அதங்கோடு பகுதியில் ஆற்றங... மேலும் பார்க்க