சென்னை காசிமேடு: மீன்பிடி தடை காலம் முடிவு; மீன் பிடித்தலுக்குத் தயாராகும் மீனவர...
இரணியல் அருகே தொழிலாளி தற்கொலை
இரணியல் அருகே குருந்தன்கோட்டில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
குருந்தன்கோடு, காடேற்றியைச் சோ்ந்த ராமசுப்பு மகன் இசக்கிமுத்து (32). வெல்டிங் தொழில் செய்துவந்த இவா், சில மாதங்களுக்கு முன்பு மனச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டாராம்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அவா் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாராம். தகவலின்பேரில், இரணியல் போலீஸாா் சென்று விசாரணை மேற்கொண்டனா். அப்போது, தன்னை இருவா் அழைப்பதாகவும் அவா்களுடன் செல்வதாகவும் இசக்கிமுத்து எழுதியிருந்ததாகக் கூறப்படும் கடிதத்தை போலீஸாா் கைப்பற்றினா்.
சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.