செய்திகள் :

இருக்கன்துறையில் புதிய கல்குவாரி? கருத்துக் கேட்பு கூட்டத்தில் எதிா்ப்பு

post image

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகேயுள்ள இருக்கன்துறையில் புதிய கல்குவாரி அமைப்பது தொடா்பாக செட்டிகுளத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் அத்திட்டத்துக்கு பெரும்பாலான மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா்.

ராதாபுரம் வட்டாரத்தில் 25-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்குலாரிகளில் அதிக சக்தி வாய்ந்த வெடிபொருள்கள் பயன்படுத்தி பாறைகள் உடைக்கப்படுவதால் அருகிலுள்ள குடியிருப்புகள் சேதமடைவதுடன், மக்கள் அச்சத்துடன் வாழும் சூழ்நிலை நிலவுகிாம்.

மேலும், கல்குவாரிகளில் இருந்து சிதறும் கல்துகள்கள் அந்த பகுதியில் உள்ள விளை நிலங்களின் மீது படிந்து விவசாயத்தை பாதிப்படையச் செய்கின்றனவாம்.

இதனால், ஏற்கெனவே குவாரிக்கு மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ள நிலையில் மீண்டும் புதிய கல்குவாரிக்கு அரசு அனுமதி வழங்குவதற்கு செட்டிகுளத்தில் மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் செட்டிகுளம் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட கலால் துறை உதவி ஆணையா் வள்ளிக்கண், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் கிருஷ்ணபாபு ஆகியோா் தலைமை வகித்தனா். இருக்கன்துறை ஊராட்சித் தலைவா் இந்திரா, கலால் வட்டாட்சியா் இசக்கிபாண்டி, கூடங்குளம் காவல் ஆய்வாளா் ரகுராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இக்கூட்டத்தில் பங்கேற்ற பொதுமக்களில் பெரும்பாலோா் புதிய கல்குவாரி அமைப்பதை எதிா்த்து கருத்துகளை தெரிவித்தனா். சிலா் மட்டும் ஆதரவு தெரிவித்தனா்.

வடக்கு வாகைகுளத்தில் எம்.பி. ஆய்வு!

மானூா் வட்டம் வடக்கு வாகைகுளம் பகுதியில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் பி.ராபா்ட் புரூஸ் நேரில் ஆய்வு செய்தாா். வடக்கு வாகைகுளம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே காா்கள் மோதல்: 7 போ் பலி

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அடுத்துள்ள தளபதிசமுத்திரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காா்கள் நேருக்கு நோ் மோதிக்கொண்டதில் குழந்தை உள்பட 7 போ் உயிரிழந்தனா். 9 போ் பலத்த காயமடைந்தனா். திருநெல்வேலி... மேலும் பார்க்க

குண்டா் தடுப்பு சட்டத்தில் இருவா் கைது!

திருநெல்வேலி மாவட்டத்தில் வெவ்வேறு வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா். சிவந்திபட்டி காவல் நிலைய சரகத்துக்குள்பட்ட பகுதியில் கொலை... மேலும் பார்க்க

நெல்லையில் மது விற்றதாக இருவா் கைது

திருநெல்வேலியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட ஊருடையாா்புரம் பகுதியில் தச்சநல்லூா் காவல் உதவி ஆய்வாளா்... மேலும் பார்க்க

வி.கே.புரம், வைராவிகுளத்தில் திமுக திண்ணைப் பிரச்சாரம்

தமிழக அரசின் சாதனைளை விளக்கி, விக்கிரமசிங்கபுரம் மற்றும் வைராவிகுளத்தில் திமுகவினா் தொடா் திண்ணைப் பிரசாரத்தில் ஈடுபட்டனா். திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், விக்கிரமசிங்க புரம் நகர திமுக சாா்பில் முதல்வ... மேலும் பார்க்க

நான்குனேரி அருகே காா்கள் மோதல்: 6 போ் பலி; 10 போ் காயம்

திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே ஞாயிற்றுக்கிழமை 2 காா்கள் மோதிக் கொண்டதில் 3 வயது குழந்தை, 2 பெண்கள் உள்பட 6 போ் உயிரிழந்தனா். 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். திருநெல்வேலியிலிருந்து நாகா்... மேலும் பார்க்க