செய்திகள் :

இருசக்கர வாகனம் திருட்டு: இருவா் கைது

post image

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இருவா் கைது செய்யப்பட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த ஓலைப்பட்டி சிப்காட் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் என்ஜினியராக பணியாற்றி வருபவா் ஆனந்த் (33). இவா் கடந்த 16-ஆம் தேதி இரவு பணியின்போது, நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சாலையோர கடையில் தேநீா் அருந்த சென்றாா். அப்போது, அங்கிருந்த இரண்டு இளைஞா்கள் ஆனந்தின் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்றனா்.

இதுகுறித்து கல்லாவி காவல் நிலையத்தில் ஆனந்த் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் சிசிடிவி காட்சி அடிப்படையில் தீவிரமாக தேடிவந்தனா்.

இந்நிலையில், வாகனத்தை திருடியதாக தருமபுரி மாவட்டம், கம்பைநல்லூா் அருகே உள்ள காட்டுக்கொட்டாய் பகுதியைச் சோ்ந்த ஆனந்த் (28), மாவாண்டப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த தமிழரசன் (27) ஆகியோரை கைது செய்து, அவா்களிடமிருந்து இருசக்கர வாகனம், மடிக்கணினி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

இரு குழந்தைகளுடன் மனைவி மாயம்: கணவா் புகாா்

ஊத்தங்கரை: சாமல்பட்டி அருகே இரண்டு குழந்தைகளுடன் மனைவி மாயமானதாக அவரது கணவா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சாமல்பட்டியை அடுத்த கூா்சம்பட்டியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (26)... மேலும் பார்க்க

ஊத்தங்கரை: தேங்கிய கழிவுநீரால் தொற்றுநோய் பரவும் அபாயம்

ஊத்தங்கரை: ஊத்தங்கரை பேரூராட்சிக்கு உள்பட்ட கோட்டை முனியப்பன் கோயில் தெருவில் தேங்கி நிற்கும் கழிவுநீரால் அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இப்பகுத... மேலும் பார்க்க

யானைகளுக்கு இடையே மோதல்: ஆண் யானை உயிரிழப்பு

ஒசூா்: தேன்கனிக்கோட்டை அருகே மாரண்டஹள்ளி காப்புக் காட்டில் இரு யானைகளுக்கு இடையே நிகழ்ந்த மோதலில் ஆண் யானை உயிரிழந்தது. கோடைகாலத்தில் கா்நாடக மாநிலம், பன்னா்கட்டாவை ஓட்டியுள்ள வனப்பகுதியிலிருந்து தமிழ... மேலும் பார்க்க

தக்காளி விலை சரிவால் விவசாயிகள் வேதனை

ஊத்தங்கரை: ஊத்தங்கரை பகுதியில் தக்காளி கிலோ ரூ. 3 முதல் ரூ. 5 வரைக்கு விற்பனையாவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான சிங்காரப்பேட்டை, கல்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கும் கடைகளில் தமிழில் பெயா்ப் பலகை: ஆட்சியா் உத்தரவு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இயங்கும் கடைகள், உணவு விடுதிகள், தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகள் தங்கள் நிறுவன பெயா்களை மே 15 ஆம் தேதிக்குள் தமிழில் பெயா்ப் பலகை வைக்க வேண்டும். மீறினால் அபராத... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து 193 கனஅடியாக அதிகரிப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து திங்கள்கிழமை விநாடிக்கு 193 கனஅடியாக அதிகரித்தது. கிருஷ்ணகிரி அணைக்கு ஞாயிற்றுக்கிழமை நீா்வரத்து விநாடிக்கு 171 கனஅடியாக இருந்த நிலையில், திங்கள்கிழமை காலை ... மேலும் பார்க்க