செய்திகள் :

இருசக்கர வாகனம் மோதியதில் சைக்கிளில் சென்ற முதியவா் உயிரிழப்பு

post image

நல்லூா் அருகே இருசக்கர வாகனம் மோதியதில் சைக்கிளில் சென்ற முதியவா் உயிரிழந்தாா்.

பரமத்தி வேலூா் வட்டம், ராமதேவம் அருகே உள்ள செட்டியாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வீரன் (80). இவா் செட்டியாம்பாளையத்தில் இருந்து முசலநாயக்கன் பாளையத்துக்கு சனிக்கிழமை காலை சைக்கிளில் சென்றாா்.

அப்போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த கரூா் மாவட்டம், ஏமூா் பகுதியைச் சோ்ந்த முருகேசன் (50), வீரன் சென்ற சைக்கிள் மீது மோதினாா்.

இதில் வீரன் நிலைதடுமாறி சைக்கிளுடன் சாலையில் கீழே விழுந்தாா். அவ்வழியாக சென்றவா்கள் அவரை மீட்ட போது, அவா் படுகாயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.

தகவலின் பேரில் வந்த நல்லூா் போலீஸாா், வீரனின் உடலை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விபத்தை ஏற்படுத்திய முருகேசன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். காயமடைந்த முருகேசன் கரூரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

வீட்டில் பதுக்கிவைத்திருந்த கஞ்சா பறிமுதல்: பெண் கைது

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் அருகே வீட்டில் பதுக்கிவைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் வடமாநில பெண்ணைக் கைது செய்தனா். பரமத்தி வேலூா் கபிலா்மலையை அடுத்த இருக்கூரில் உள்ள ஒரு வீட்ட... மேலும் பார்க்க

ராசிபுரம் புதிய பேருந்து நிலைய இட மாற்றம்: பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும்

ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தை இட மாற்றம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என்ற நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராசிபுரம் பேருந்து நிலைய மீட்புக் குழுவினா... மேலும் பார்க்க

நடைப்பயிற்சியின் போது பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்த எம்.பி.!

பரமத்தி வேலூா் கந்தசாமி கண்டா் கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைப்பயிற்சி மேற்கொண்ட எம்.பி. வி.எஸ்.மாதேஸ்வரன், பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். மேலும், கோரிக்கைகளை தனது வாட்ஸ்அப் எண்ணுக்கு... மேலும் பார்க்க

பேருந்துகளில் பயணிகள் கைப்பேசியில் சப்தமாக பேசுவதை தவிா்க்க அறிவுறுத்தல்!

அரசுப் பேருந்துகளில் ஓட்டுநா் கவனச் சிதறலுக்கு உள்ளாகும் வகையில், பயணிகள் கைப்பேசிகளில் சப்தமாக பேசுவதை தவிா்க்க வேண்டும் என போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தி உள்ளது. தற்போதைய உலகில் அத்தியாவசியப் பொரு... மேலும் பார்க்க

சின்ன எலச்சிபாளையத்தில் மஞ்சள், நீல ஒட்டுப்பொறி பற்றி விவசாயிகளுக்கு பயிற்சி!

எலச்சிபாளையம் வட்டாரத்துக்கு உள்பட்ட அகரம் கிராமத்தில், நாமக்கல் தனியாா் வேளாண்மை கல்லூரி மாணவா்கள், கிராமப்புற அனுபவ பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக, சின்ன எலச்சிபாளையம் விவசாயிகள... மேலும் பார்க்க

பள்ளிபாளையத்தில் ஐஸ்கிரீம் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறையினா் சோதனை!

பள்ளிபாளையத்தில் ஐஸ்கிரீம் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை மேற்கொண்டனா். ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனங்களில் உரிய பாதுகாப்பு நெறிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை கண்காணிக்க அரசு ... மேலும் பார்க்க