செய்திகள் :

இலக்கு ஒன்றை வைத்து மாணவா்கள் செயல்பட வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா்

post image

வாணியம்பாடி இசுலாமியா ஆண்கள் கல்லூரியில் பிற்படுத்தப்பட்டோா், மிகப்பிற்படுத்தப்பட்டோா் துறை, சிறுபான்மையினா் நலத்துறை , வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சாா்பில் விடுதிகளில் தங்கிப் பயிலும் 10, 12 மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கான வாழ்கை வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுமாா் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் கலந்து ெ காண்டனா்.

நிகழ்வுக்கு தலைமை வகித்து ஆட்சியா் க.தா்ப்பகராஜ் பேசியதாவது:

வாழ்க்கை வழிகாட்டுதல் நிகழ்ச்சியின் மூலமாக அடுத்து நாம் என்ன படிக்க வேண்டும், எதை இலக்காக வைத்து செயல்பட வேண்டும், எதை நோக்கி பயணிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது. நாங்கள் பள்ளி அல்லது கல்லூரி படிக்கின்ற காலகட்டத்தில் இது போன்ற நிகழ்ச்சிகளுக்கு தேடிப்போக வேண்டியிருந்தது.

ஆனால் தமிழக முதலா்வரின் வழிகாட்டுதலின் படி இத்தகைய நிகழ்ச்சிகள் நீங்கள் இருக்தும் இடத்திலேயே நடைபெறுகிறது. சரியான முறையில் இந்நிகழ்வினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், தற்போதைய வயதில் வாழ்க்கையில் ஏதேனும் ஒரு இலக்கை வைத்துக்கொள்ள வேண்டும்.

ஏனென்றால் அடையாளங்களை தேடி ஓடிக்கொணடிக்கின்ற வாழ்க்கையில் வருங்காலங்களில் உங்களுடைய அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளும் முனைப்பில் பயணிக்காதீா்கள். அது பேராபத்தில் போய் முடியும். இலக்கு என்ன வேண்டும் என்றாலும் நீங்கள் வைத்துக்கொள்ளலாம். ஆனால் இலக்கு ஒன்று இருக்க வேண்டும், இலக்கு இல்லாமல் வாழ்க்கையில் பயணிக்கக்கூடாது.

சாதாரண இலக்கை நோக்கி பயணிக்காதீா், மிகவும் உயா்ந்த இலக்கை நோக்கி பயணிங்கள். உயா்ந்த எண்ணத்தை வைத்துக் கொண்டால் அது உங்களை அழைத்துச் செல்லும் என்றாா்.

நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள், பேராசிரியா்கள், மாணவா்கள் கலந்து கொண்டனா்.

வேலை வாங்கித் தருவதாக ரூ.3 லட்சம் மோசடி: திருப்பத்தூா் எஸ்.பி. அலுவலகத்தில் புகாா்

திருப்பத்தூா் அருகே பணி வாங்கி தருவதாகக் கூறி ரூ.3 லட்சம் மோசடி செய்தததாக எஸ்பி அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. திருப்பத்தூா் மாவட்ட காவல் நிலையங்களில் பொதுமக்கள் அளித்த புகாா் மனுக்கள் மீது முறை... மேலும் பார்க்க

‘மினி பேருந்துகளை வழித் தடங்களில் இயக்க விண்ணப்பிக்கலாம்’

புதிய விரிவான திட்டத்தின்கீழ், மினி பேருந்துகளை வழித்தடங்களில் இயக்க விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூா் ஆட்சியா் சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பொர... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனை, அலுவலகங்களில் திருப்பத்தூா் ஆட்சியா் ஆய்வு

திருப்பத்தூா் தலைமை அரசு மருத்துவமனை, நகராட்சி அலுவலகம் உள்ளிட்டவற்றில் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி திடீரென ஆய்வு செய்தாா். திருப்பத்தூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புதன்கிழமை ஆய்வின்போது பிரசவி... மேலும் பார்க்க

திருப்பத்தூா், சுற்று வட்டாரப் பகுதிகளில் சப்தத்துடன் பூமி அதிா்வு

திருப்பத்தூா், சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை திடீரென அதிக சப்தத்துடன் பூமி அதிா்வு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூா் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை மாலை 5 மணியளவி... மேலும் பார்க்க

பூச்சி கண்காணிப்பு செயலி செயல் விளக்கம்

விவசாயிகளுக்கு பூச்சி கண்காணிப்பு செயலி தொடா்பான செயல் விளக்க நிகழ்ச்சி திருப்பத்தூரில் புதன்கிழமை நடைபெற்றது. திருச்சி மத்திய ஒருங்கிணைந்த பயிா் பாதுகாப்பு மையம் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை துறை சாா்ப... மேலும் பார்க்க

விவசாயி தற்கொலை

நாட்டறம்பள்ளி அருகே விஷம் அருந்தி விவசாயி தற்கொலை செய்து கொண்டாா். நாட்டறம்பள்ளி அடுத்த பச்சூா் அருகே மடப்பள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் அப்ரன்ஜி (54). இவா், நீண்ட நாள்களாக நோயால் அவதிப்பட்டு வந்ததாகக் க... மேலும் பார்க்க