நான் ஆதரவு தெரிவிக்கும் அணிகள் தோற்கின்றன; ஆர்சிபிக்கு ஆதரவு: சேவாக்
இலவச சிறப்பு பொது மருத்துவ முகாம்
குடியாத்தம் கம்மவாா் சேவா டிரஸ்ட், வேலூா் ஸ்ரீபுரம் ஸ்ரீநாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், ஸ்ரீசாய் ஹியரிங் சொல்யூஷன் ஆகியவை இணைந்து ராஜாகோயிலில் இலவச சிறப்பு பொது மருத்துவ முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.
முகாமுக்கு முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவா்கள் கே.சுகுமாா், டி.என்.ராஜேந்திரன் ஆகியோா் தலைமை வகித்தனா். ரோட்டரி நிா்வாகிகள் டி.சி.ஜெகன்நாதன், ஆா்.பாலாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா். வி.கணேஷ், வி.இந்துஜா ஆகியோா் முகாமைத் தொடங்கி வைத்தனா். முகாமில் 250- க்கும் மேற்பட்டோருக்கு செவித் திறன் பரிசோதனை, நுரையீரல் பரிசோதனை, ரேடியோபதி பரிசோதனை, எலும்பு தன்மை கண்டறிதல், கால் நரம்பு பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
முகாம் 20 பேருக்கு சலுகை விலையில் காது கேட்கும் கருவிகள் வழங்கப்பட்டன. ஜி.ஜெயவேல், பி.சிவகுமாா், எம்.டி.பிரவீன்பாபு, கே.சுரேஷ், என்.சி.ஸ்ரீதா், கே.ஏ.முரளி உள்ளிட்டோா் முகாம் ஏற்பாடுகளைச் செய்திருந்தனா்.