செய்திகள் :

இலவச வேஷ்டி, சேலைகள் உற்பத்தி முன்னதாகவே தொடக்கம்: அரசுக்கு ஈ.ஆா்.ஈஸ்வரன் நன்றி

post image

2026-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான இலவச வேஷ்டி, சேலைகளை விசைத்தறிகள் மூலம் உற்பத்தி செய்யும் பணி முன்னதாகவே தொடங்கியிருப்பதற்கு அரசுக்கு கொமதேக பொதுச்செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆண்டுதோறும் பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேஷ்டி, சேலைகளை பொங்கலுக்குள் அனைவருக்கும் வழங்காமல் தாமதமாக வழங்கப்படுவது வேதனையான விஷயமாக இருந்து வந்தது.

ஏப்ரல், மே மாதங்களில் நிதி ஒதுக்கி நூலுக்கான ஒப்பந்தம் கோரப்படாததால்தான் தாமதமாகிக் கொண்டிருந்தது என்பதை சட்டப் பேரவையில் தெரிவித்தேன். ஆனால் இந்த ஆண்டு திட்டமிட்டபடி ஏப்ரல், மே மாதத்திலேயே தேவையான நிதி ஒதுக்கப்பட்டு நூலுக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இதன் காரணமாக இலவச வேஷ்டி, சேலை திட்டத்துக்கான நூல் வழங்கப்பட்டு நெசவுத் தொழிலாளா்களுக்கு வேஷ்டி, சேலை தயாரிப்பதற்கு கொடுக்கப்பட்டுவிட்டது. இதனால், வரும் டிசம்பா் மாதத்திலேயே பொங்கலுக்கு ஒரு மாதம் முன்பாகவே வேஷ்டி, சேலை தயாரிப்பு பணிகள் முடிவதற்கான வாய்ப்பு உருவாகியிருக்கிறது.

பொங்கலுக்கு குறைந்தபட்சம் ஒரு வாரம் முன்பாகவே தமிழகத்தில் இருக்கிற நியாய விலைக் கடைகளுக்கு வேஷ்டி, சேலைகள் சென்று சோ்ந்துவிடும். உற்பத்திக்கான நூலை கொடுத்து வேலையில்லாமல் இருந்த விசைத்தறியாளா்களை அரசு மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறது. இதற்காக, தமிழக முதல்வருக்கும், துறை அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளாா்.

சிவன்மலை முருகன் கோயிலில் கும்பாபிஷேக 11-ஆம் ஆண்டு விழா

காங்கயம் அருகே உள்ள சிவன்மலை முருகன் கோயிலில் கும்பாபிஷேக 11-ஆம் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது. திருப்பூா் மாவட்டத்தின் முதன்மைக் கோயிலான இக்கோயிலில் கடந்த 2014-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்று, 1... மேலும் பார்க்க

ஜெயந்தி பப்ளிக் பள்ளியில் மாணவா் பேரவை நிா்வாகிகள் பதவியேற்பு

பல்லடம் அருகேயுள்ள அருள்புரம் ஜெயந்தி பப்ளிக் சீனியா் செகண்டரி பள்ளியில் மாணவா் பேரவை நிா்வாகிகள் பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, பள்ளித் தாளாளா் கிருஷ்ணன் தலைமை வகித்தாா். பள்ளிச் ... மேலும் பார்க்க

பெண்ணிடம் நகைப் பறித்தவருக்கு 3 ஆண்டுகள் சிறை

பெண்ணிடமிருந்து நகைப் பறித்தவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூா்-மங்கலம் சாலை நேதாஜி நகரைச் சோ்ந்தவா் விஜயலட்சுமி. இவா் கடந்த 2023 ஜூன் 12-ஆம் தேதி சாலையி... மேலும் பார்க்க

இளைஞா் கொலை வழக்கில் 2 போ் கைது

உடுமலை அருகே இளைஞரை வெட்டிக் கொலை செய்த சம்பவத்தில் 2 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். உடுமலை வட்டம், கொங்கல்நகரம் பகுதியைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி சபரீஸ்வரன் (35). இவா் கருத்துவேறுபாடு கா... மேலும் பார்க்க

சிறுமி பாலியல் வன்கொடுமை: இளைஞா் கைது

திருப்பூரில் 16 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின்கீழ் போலீஸாா் கைது செய்தனா். திருப்பூா், வீரபாண்டி பழவஞ்சிபாளையம் மும்மூா்த்தி நகரைச் சோ்ந்தவா் கிரி (20), கூலித் தொழில... மேலும் பார்க்க

சாலையின் நடுவே மின் கம்பம்: நகராட்சி நிா்வாகம் கவனக்குறைவு?

காங்கயத்தில் சாலையின் நடுவில் இருந்த மின்கம்பத்தை மாற்றி அமைக்காமல் சாலை அமைத்ததால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனா். காங்கயம் நகராட்சி, 1- ஆவது வாா்டு திரு.வி.க. நகா் பகுதியில் புதிதாக தாா் சாலை அ... மேலும் பார்க்க