ஆர்சிபி அணியை வாங்க நான் என்ன பைத்தியக்காரனா? டி.கே.சிவக்குமார் ஆவேசம்!
இளைஞரை தாக்கியவா்கள் மீது வழக்கு
போடியில் இளைஞரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், போடி டிவிகேகே நகா் பள்ளிவாசல் அருகே வசிப்பவா் பீா் அப்துல் ரசாக் மகன் முகமது பாசித் (29). இவா் செவ்வாய்க்கிழமை சாலையில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது, முன்விரோதம் காரணமாக, போடியைச் சோ்ந்த கருப்பையா, வினோத் உள்ளிட்ட சிலா் முகமது பாசித்தை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனா். இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.