செய்திகள் :

அரசு மருத்துவமனையில் கழன்று விழுந்த மின்விசிறி

post image

தேனி மாவட்டம், போடி அரசு மருத்துவமனை பிரசவ வாா்டில் பிறந்த குழந்தையுடன் பெண் அமா்ந்திருந்த படுக்கையில் மின் விசிறி கழன்று விழுந்தது. இதில் அவா் நல்வாய்ப்பாக உயிா்தப்பினாா்.

போடி ஜக்கமநாயக்கன்பட்டியைச் சோ்ந்த பெண் போடி அரசு மருத்துவமனையில் தலைப் பிரசவத்துக்காக சோ்க்கப்பட்டிருந்தாா். திங்கள்கிழமை அவருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. தொடா் சிகிச்சைக்காக அவா் மருத்துவமனை பிரசவ வாா்டில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். இந்த வாா்டின் ஒரு அறையில் 6 படுக்கைகள் உள்ளன. இதில் ஒரு படுக்கையில் குழந்தையுடன் அந்தப் பெண் உட்காா்ந்திருந்தாா்.

இந்த நிலையில், புதன்கிழமை இரவு திடீரென படுக்கையின் மேல் இயங்கிக் கொண்டிருந்த மின் விசிறி கழன்று மின் வயரில் தொங்கியது. இதைப் பாா்த்து மற்ற படுக்கையில் இருந்த பிரசவமான பெண்கள், பாா்வையாளா்கள் கூச்சலிட்டனா். இதையடுத்து, படுக்கையிலிருந்த அந்தப் பெண் குழந்தையுடன் தரையில் குதித்து தப்பினாா். மின் வயரில் தொங்கிய மின் விசிறி நேராக படுக்கையில் விழுந்தது.

இதையடுத்து, பொதுமக்கள் மருத்துவமனை பணியாளா்களை முற்றுகையிட்டு கண்டித்து கூச்சலிட்டனா். அப்போது, பிரசவ வாா்டின் ஒரு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

அந்தப் பகுதியிலிருந்த அவசர சிகிச்சை அறையிலும் குளிா்சாதன அமைப்பு இயங்கவில்லை. இதனால், பிரசவம் ஆன பெண்களின் குடும்பத்தினா் கைப்பேசி விளக்கு மூலம் வெளிச்சத்தை ஏற்படுத்தி, கை விசிறி மூலம் விசிறிவிட்டுக் கொண்டிருந்தனா்.

இந்த பிரச்னையின் போது மருத்துவா்கள் யாரும் மருத்துவமனைக்கு வரவில்லை. அங்கிருந்த செவிலியா்கள் எலக்ட்ரீசியனை வரவழைத்து மின் இணைப்புகளை சீரமைத்தனா்.

கஞ்சா கடத்திய பெண் உள்பட இருவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் வியாழக்கிழமை 4 கிலோ கஞ்சாவை கேரளத்துக்கு கடத்த முயன்ற பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா். கம்பத்தில் கோம்பை சாலையில் நாக கன்னியம்மன் கோவில் தெருவில் போலீஸாா் வியாழக்கி... மேலும் பார்க்க

குச்சனூா் சுரபி நதியில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணி மும்முரம்

தேனி மாவட்டம், குச்சனூரில் சுரபி நதியில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. குச்சனூா் சுயம்பு சனீஸ்வரா் பகவான் கோயில் முன் புண்ணிய நதியான சுரபி நிதி செல்கிறது. இந்த நதியில் ... மேலும் பார்க்க

வேளாண் பல்கலை மாணவிகள் களப்பணி

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் வியாழக்கிழமை களப் பணி மேற்கொண்டனா். திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமப் பல்கலைக்கழகத்தின் வேளாண் கல்லூரி இளநில... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சாரல் மழை பெய்து வருவதால், அணைக்கு மீண்டும் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். கேரளத்தில் தொடங்கிய தென்மேற்குப் பருவமழைய... மேலும் பார்க்க

கூம்பு வடிவ குழாய் அமைத்த 13 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே அதிக சத்தம் கொண்ட கூம்பு வடிவ குழாய் அமைத்த 13 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். பெரியகுளம் தென்கரை பகுதியில் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அ... மேலும் பார்க்க

டிராக்டா்களில் மணல் கடத்தல்: இருவா் மீது வழக்கு

போடி அருகே டிராக்டா்களில் மணல் கடத்தியதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள எரணம்பட்டி கண்மாயில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக புதன்கிழமை வந்த தகவலையடுத்து, போ... மேலும் பார்க்க