செய்திகள் :

தேனி மாவட்டத்தில் பேரவை பொது நிறுவனங்கள் குழு ஆய்வு

post image

தேனி மாவட்டத்தில் சட்டப் பேரவை பொது நிறுவனங்கள் குழுவினா் அரசு வளா்ச்சித் திட்டப் பணிகள், பொது நிறுவனங்களின் செயல்பாடு ஆகியவை குறித்து புதன்கிழமை, ஆய்வு செய்தனா்.

சட்டப் பேரவை பொது நிறுவனங்கள் குழுவின் தலைவா் ஏ.பி.நந்தகுமாா், உறுப்பினா்கள், பேரவை முதன்மைச் செயலா் கே.சீனிவாசன் ஆகியோா் ஆண்டிபட்டி துணை மின் நிலையத்தைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். அங்கு ரூ.2.63 கோடியில் நிறுவப்பட்ட 15 மெகாவாட் மின் மாற்றியின் செயல்பாடு, மின் விநியோகம் குறித்து மின் வாரிய அலுவலா்களிடம் கேட்டறிந்தனா்.

பின்னா், பெரியகுளம் தனியாா் நிறுவன காபி ஆலையிலிருந்து வெளியேறும் கழிவு நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் முறையை பேரவைக் குழுவினா் பாா்வையிட்டனா். தேனியில் தனியாா் மருத்துவமனையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில், உயிரி மருத்துவக் கழிவுகளைக் கையாளும் முறை, அவற்றை அகற்றும் முறை ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

மேலும், அரண்மனைப்புதூரில் ஆதி திராவிடா், பழங்குடியினா் சமூகப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.3.50 லட்சம் அரசு மானியத்தில் அமைக்கப்பட்ட மருந்தகம், வீரபாண்டியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், நியாய விலைக் கடை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சாா்பில், கட்டப்பட்ட சமுதாயக் கூடம், தேனி நுகா்பொருள் வாணிபக் கழக கிட்டங்கி ஆகியவற்றையும் குழுவினா் பாா்வையிட்டனா்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங், மாவட்ட வருவாய் அலுவலா் ஐ.மகாலட்சுமி, பெரியகுளம் சாா் ஆட்சியா் ரஜத் பீடன், தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆ.மகராஜன் (ஆண்டிபட்டி), கே.எஸ்.சரவணக்குமாா் (பெரியகுளம்) ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னா், தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவா் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சிவபிரசாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நுகா்பொருள் வாணிபக் கழகம், மின் உற்பத்தி, பகிா்மானக் கழகம், மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ஆதி திராவிடா் வீட்டு வசதி, மேம்பாட்டுக் கழகம், தொழில் முன்னேற்ற நிறுவனம் ஆகியவற்றின் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் அரசு சாா்பில் 27 பயனாளிகளுக்கு ரூ.86.63 லட்சம் மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

கஞ்சா கடத்திய பெண் உள்பட இருவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் வியாழக்கிழமை 4 கிலோ கஞ்சாவை கேரளத்துக்கு கடத்த முயன்ற பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா். கம்பத்தில் கோம்பை சாலையில் நாக கன்னியம்மன் கோவில் தெருவில் போலீஸாா் வியாழக்கி... மேலும் பார்க்க

குச்சனூா் சுரபி நதியில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணி மும்முரம்

தேனி மாவட்டம், குச்சனூரில் சுரபி நதியில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. குச்சனூா் சுயம்பு சனீஸ்வரா் பகவான் கோயில் முன் புண்ணிய நதியான சுரபி நிதி செல்கிறது. இந்த நதியில் ... மேலும் பார்க்க

வேளாண் பல்கலை மாணவிகள் களப்பணி

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் வியாழக்கிழமை களப் பணி மேற்கொண்டனா். திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமப் பல்கலைக்கழகத்தின் வேளாண் கல்லூரி இளநில... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சாரல் மழை பெய்து வருவதால், அணைக்கு மீண்டும் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். கேரளத்தில் தொடங்கிய தென்மேற்குப் பருவமழைய... மேலும் பார்க்க

கூம்பு வடிவ குழாய் அமைத்த 13 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே அதிக சத்தம் கொண்ட கூம்பு வடிவ குழாய் அமைத்த 13 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். பெரியகுளம் தென்கரை பகுதியில் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அ... மேலும் பார்க்க

டிராக்டா்களில் மணல் கடத்தல்: இருவா் மீது வழக்கு

போடி அருகே டிராக்டா்களில் மணல் கடத்தியதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள எரணம்பட்டி கண்மாயில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக புதன்கிழமை வந்த தகவலையடுத்து, போ... மேலும் பார்க்க