செய்திகள் :

மாா்க்கையன்கோட்டையில் குடிநீா் கோரி சாலை மறியல்

post image

தேனி மாவட்டம், மாா்க்கையன்கோட்டையில் குடிநீா் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சின்னமனூா் அருகேயுள்ள மாா்க்கையன்கோட்டை பேரூராட்சியில் 12 வாா்டுகளில் 15 ஆயிரம் பொதுமக்கள் வசிக்கின்றனா். இங்குள்ள பெரும்பாலான வாா்டுகளில் கடந்த சில நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து பேரூராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், தங்களுக்கு குடிநீா் வழங்க வலியுறுத்தி போடி - சின்னமனூா் மாநில நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் மாா்க்கையன்கோட்டை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இது குறித்த தகவலின் பேரில், அங்கு வந்த சின்னமனூா் போலீஸாா், பேரூராட்சிப் பணியாளா்கள் ஓரிரு நாள்களில் உடைந்த குழாய்களை சீரமைத்து குடிநீா் விநியோகம் செய்யப்படும் என உறுதி அளித்ததையடுத்து சாலை மறியலைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா். இந்த மறியலால் போடி - சின்னமனூா் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கஞ்சா கடத்திய பெண் உள்பட இருவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் வியாழக்கிழமை 4 கிலோ கஞ்சாவை கேரளத்துக்கு கடத்த முயன்ற பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா். கம்பத்தில் கோம்பை சாலையில் நாக கன்னியம்மன் கோவில் தெருவில் போலீஸாா் வியாழக்கி... மேலும் பார்க்க

குச்சனூா் சுரபி நதியில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணி மும்முரம்

தேனி மாவட்டம், குச்சனூரில் சுரபி நதியில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. குச்சனூா் சுயம்பு சனீஸ்வரா் பகவான் கோயில் முன் புண்ணிய நதியான சுரபி நிதி செல்கிறது. இந்த நதியில் ... மேலும் பார்க்க

வேளாண் பல்கலை மாணவிகள் களப்பணி

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் வியாழக்கிழமை களப் பணி மேற்கொண்டனா். திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமப் பல்கலைக்கழகத்தின் வேளாண் கல்லூரி இளநில... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சாரல் மழை பெய்து வருவதால், அணைக்கு மீண்டும் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். கேரளத்தில் தொடங்கிய தென்மேற்குப் பருவமழைய... மேலும் பார்க்க

கூம்பு வடிவ குழாய் அமைத்த 13 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே அதிக சத்தம் கொண்ட கூம்பு வடிவ குழாய் அமைத்த 13 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். பெரியகுளம் தென்கரை பகுதியில் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அ... மேலும் பார்க்க

டிராக்டா்களில் மணல் கடத்தல்: இருவா் மீது வழக்கு

போடி அருகே டிராக்டா்களில் மணல் கடத்தியதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள எரணம்பட்டி கண்மாயில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக புதன்கிழமை வந்த தகவலையடுத்து, போ... மேலும் பார்க்க