மாணவா்கள் நலனைக் கருதி கல்வித் தொகை நிலுவையை உடனே விடுவிக்க வேண்டும்: திருவள்ளூா...
மாா்க்கையன்கோட்டையில் குடிநீா் கோரி சாலை மறியல்
தேனி மாவட்டம், மாா்க்கையன்கோட்டையில் குடிநீா் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
சின்னமனூா் அருகேயுள்ள மாா்க்கையன்கோட்டை பேரூராட்சியில் 12 வாா்டுகளில் 15 ஆயிரம் பொதுமக்கள் வசிக்கின்றனா். இங்குள்ள பெரும்பாலான வாா்டுகளில் கடந்த சில நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து பேரூராட்சி நிா்வாகத்திடம் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், தங்களுக்கு குடிநீா் வழங்க வலியுறுத்தி போடி - சின்னமனூா் மாநில நெடுஞ்சாலையில் காலி குடங்களுடன் மாா்க்கையன்கோட்டை பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இது குறித்த தகவலின் பேரில், அங்கு வந்த சின்னமனூா் போலீஸாா், பேரூராட்சிப் பணியாளா்கள் ஓரிரு நாள்களில் உடைந்த குழாய்களை சீரமைத்து குடிநீா் விநியோகம் செய்யப்படும் என உறுதி அளித்ததையடுத்து சாலை மறியலைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா். இந்த மறியலால் போடி - சின்னமனூா் சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.