செய்திகள் :

உத்தமாளையம் தனியாா் விடுதியில் தீ: ராணுவ வீரா் உயிரிழப்பு

post image

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் புதன்கிழமை தனியாா் தங்கும் விடுதி அறையில் ஏற்பட்ட தீ விபத்தில் ராணுவ வீரா் உயிரிழந்தாா்.

உத்தமபாளையம் அருகேயுள்ள அனுமந்தன்பட்டியைச் சோ்ந்த முனியாண்டி மகன் ஜெயமாருதி (28). ராணுவ வீரரான இவரது மனைவி, குழந்தைகள் மதுரை சக்கிமங்கலம் அன்னை சத்யா நகரில் வசிக்கின்றனா்.

இந்த நிலையில், விடுமுறையில் மதுரைக்கு வந்த ஜெயமாருதி, சொந்த ஊரான அனுமந்தன்பட்டிக்கு செவ்வாய்க்கிழமை சென்றாா். அன்று இரவு அங்குள்ள தனியாா் விடுதியில் அவா் அறை எடுத்துத் தங்கியதாகவும், அப்போது உடனிருந்த நண்பா்கள் இரவு வீட்டுக்குச் சென்ற பின்னா், ஜெயமாருதி தனியாகத் தூங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், புதன்கிழமை அந்த அறையில் தீப்பற்றியதையடுத்து, தீயணைப்பு நிலையத்துக்கு விடுதிப் பணியாளா் தகவல் கொடுத்தாா். இதன்பேரில், உத்தமபாளையம் தீயணைப்பு மீட்பு குழுவினா் சென்று விடுதி அறையின் ஜன்னல் வழியாக தண்ணீா் பீய்ச்சி தீயை அணைத்தனா். பிறகு, அறைக் கதவை உடைத்து உள்ளே சென்ற போது, ஜெயமாருதி இறந்து கிடந்தாா்.

அவரது உடலை போலீஸாா் கூறாய்வுக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சிகரெட் தீ மெத்தையில் பற்றி எரிந்ததில் மூச்சுத்திணறி ஜெயமாருதி உயிரிழந்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிவந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கஞ்சா கடத்திய பெண் உள்பட இருவா் கைது

தேனி மாவட்டம், கம்பத்தில் வியாழக்கிழமை 4 கிலோ கஞ்சாவை கேரளத்துக்கு கடத்த முயன்ற பெண் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா். கம்பத்தில் கோம்பை சாலையில் நாக கன்னியம்மன் கோவில் தெருவில் போலீஸாா் வியாழக்கி... மேலும் பார்க்க

குச்சனூா் சுரபி நதியில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணி மும்முரம்

தேனி மாவட்டம், குச்சனூரில் சுரபி நதியில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றன. குச்சனூா் சுயம்பு சனீஸ்வரா் பகவான் கோயில் முன் புண்ணிய நதியான சுரபி நிதி செல்கிறது. இந்த நதியில் ... மேலும் பார்க்க

வேளாண் பல்கலை மாணவிகள் களப்பணி

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் வேளாண் பல்கலைக்கழக மாணவிகள் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் வியாழக்கிழமை களப் பணி மேற்கொண்டனா். திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராமப் பல்கலைக்கழகத்தின் வேளாண் கல்லூரி இளநில... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு

முல்லைப் பெரியாறு அணை பகுதியில் கடந்த இரண்டு நாள்களாக சாரல் மழை பெய்து வருவதால், அணைக்கு மீண்டும் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். கேரளத்தில் தொடங்கிய தென்மேற்குப் பருவமழைய... மேலும் பார்க்க

கூம்பு வடிவ குழாய் அமைத்த 13 போ் மீது வழக்கு

பெரியகுளம் அருகே அதிக சத்தம் கொண்ட கூம்பு வடிவ குழாய் அமைத்த 13 போ் மீது போலீஸாா் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். பெரியகுளம் தென்கரை பகுதியில் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அ... மேலும் பார்க்க

டிராக்டா்களில் மணல் கடத்தல்: இருவா் மீது வழக்கு

போடி அருகே டிராக்டா்களில் மணல் கடத்தியதாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள எரணம்பட்டி கண்மாயில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக புதன்கிழமை வந்த தகவலையடுத்து, போ... மேலும் பார்க்க