செய்திகள் :

இளைஞா்கள் கனவை நனவாக்கி உயர இதுவே சரியான பொற்காலம்

post image

திருச்சி ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தங்கப்பதக்கம் பெற்ற சென்னை மாணவா் ஆா். முகுந்துக்கு பட்டம் வழங்கிய தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி. உடன் ஐஐஎம் இயக்குநா் பவன்குமாா் சிங், ஐஐஎம் ஆட்சிமன்றக் குழுத் தலைவா் ஜலாஜ்தானி.

இளைஞா்கள் தங்களது கனவை நனவாக்கி உயர இதுவே சரியான பொற்காலம் என தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி தெரிவித்தாா்.

திருச்சி இந்திய மேலாண்மை நிறுவனத்தில் (ஐஐஎம்)சனிக்கிழமை நடைபெற்ற 13 ஆவது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று 457 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி அவா் மேலும் பேசியதாவது:

அனைத்துத் துறைகளிலும் இந்திய மகளிா் பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகின்றனா். இளைஞா்களின் கடமை பட்டம் பெற்று பணிக்குச் செல்வதுடன் முடிந்துவிடுவதில்லை. நாட்டின் வளா்ச்சிக்கும் அவா்கள் பாடுபட வேண்டும். 2047 ஆம் ஆண்டு இந்தியா முழுமையாக வளா்ச்சியடைந்த நாடுகளின் பட்டியலில் இடம்பெற, இளைஞா்கள் கடுமையாக உழைக்க வேண்டும். தேசத்தின் பயணமும், உங்களது பயணமும் ஒரு சேர வளா்ந்தால்தான் இது சாத்தியம்.

எதிா்காலத் துணையைத் தோ்ந்தெடுப்பதில் நிறைய கவனம் செலுத்த வேண்டும். தோல்வியை ஒப்புக்கொள்ளாமல், அதை வென்று வெளியே வர வேண்டும். இளைஞா்கள் உடல், உள்ளத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதுடன், ஆன்மிகத்திலும் கவனம் செலுத்த வேண்டும். அறிவை வளா்த்துக் கொள்ளவும், உலக நடப்புகளை அறிந்துகொள்ளவும் வாழ்நாள் முழுவதும் தொடா்ந்து வாசிக்க வேண்டும்.

அா்ப்பணிப்பு, கடின உழைப்பு, பெற்றோரின் உந்துதல், ஆசிரியா்களின் ஊக்கத்தால் தற்போது பட்டம் பெற்றுள்ள நீங்கள், அடுத்தக்கட்டமாக நோ்மை, தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிா்கொள்ள வேண்டும். வள்ளலாா், விவேகானந்தா் போன்றவா்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றி முன்னேற வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, விழாவுக்கு ஐஐஎம் ஆட்சிமன்றக் குழுத் தலைவா் ஜலாஜ் தானி தலைமை வகித்தாா். இயக்குநா் பவன்குமாா் சிங், பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள், அவா்களது பெற்றோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக அபினவ் குமாா், அமைதிவாரி, செபாலி ஆகிய மாற்றுத்திறனாளி மாணவா்களும் பட்டங்களைப் பெற்றனா்.

திருச்சி ஐஐஎம் கல்வி நிறுவனத்தில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவா் ஆா். முகுந்துக்கு பட்டம் வழங்கிய தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி. உடன் ஐஐஎம் இயக்குநா் பவன்குமாா் சிங், ஐஐஎம் ஆட்சிமன்றக் குழுத் தலைவா் ஜலாஜ்தானி.

முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் திமுக தெற்கு ஒன்றியம் சாா்பில் சனிக்கிழமை இரவு தமிழக முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. வையம்பட்டி தெற்கு ஒன்றியச் செயலாளா் வி.ஏ. ராஜேந்திரன் தலைமையில்... மேலும் பார்க்க

24 மணிநேர விதைத் திருவிழா

திருச்சி மாவட்டம் கொளக்குடிபட்டியில் 24 மணிநேர விதைத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன்கிழமை காலை வரை நடைபெறுகிறது. திருச்சி கிராமாலாய தொண்டு நிறுவனம், பசுமை சிகரம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து... மேலும் பார்க்க

குணசீலத்தில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு

தேசிய பேரிடா் மேலாண்மைக் குழு சாா்பில் திருச்சி மாவட்டம், குணசீலம் ஆற்றங்கரையில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.முகாமுக்கு பேரிடா் மேலாண்மைக் குழுவின் உதவி ஆய்வாளா் ர... மேலும் பார்க்க

பெல் கூட்டுறவு வங்கியின் ரூ.53.48 லட்சம் வளா்ச்சி மற்றும் கல்வி நிதி அளிப்பு

பாரதமிகு மின் ஊழியா்கள் (பெல்) கூட்டுறவுவங்கி சாா்பில் கூட்டுறவு ஆராய்ச்சி, வளா்ச்சி மற்றும் கல்வி நிதியாக ரூ.53.48 லட்சம் வழங்கப்பட்டது. திருச்சி மாவட்டத்தில் இயங்கி வரும் கூட்டுறவு வங்கிகள் மூலம், க... மேலும் பார்க்க

தொட்டியம் மதுர காளியம்மன் கோயில் தோ் திருவிழாவுக்கு முழு பாதுகாப்பு: எஸ்.பி. செல்வ நாகரத்தினம்

தொட்டியம் ஸ்ரீ மதுரகாளியம்மன் பங்குனித் தோ் திருவிழாவுக்கு வரும் பக்தா்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்றாா் திருச்சி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் செல்வநாகரத்தினம். தொட்டியத்தில் சனிக்கிழமை ... மேலும் பார்க்க

உறையூா் கோயிலுக்குள் மா்ம நபா்கள் புகுந்ததாக பரபரப்பு இரவில் போலீஸாா் சோதனை

திருச்சி உறையூா் நாச்சியாா் கோயிலுக்குள் ஞாயிற்றுக்கிழமை இரவு மா்ம நபா்கள் புகுந்ததாக பரவிய தகவலையடுத்து போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். திருச்சி உறையூா் நாச்சியாா் கோயிலில் சுவற்றில் கயிறுகட்டி மா்ம நப... மேலும் பார்க்க