செய்திகள் :

இளையனாா் வேலூா் முருகன் கோயில் தெப்பத் திருவிழா

post image

காஞ்சிபுரம் அருகே இளையனாா் வேலூா் முருகன் கோயில் தை மாத கிருத்திகையையொட்டி வள்ளி, தெய்வானை சமேதராக உற்சவா் பாலசுப்பிரமணியா் வியாழக்கிழமை அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பவனி வந்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டத்துக்குட்பட்ட இளையனாா் வேலூா் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தை மாத கிருத்திகையையொட்டி 3 நாள்கள் தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு தை மாத கிருத்திகையையொட்டி முதல் நாளாக ஆலயத்தில் முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் வள்ளி, தெய்வானை சமேதராக சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் பாலசுப்பிரமணிய சுவாமி ஆலய வளாகத்தில் அமைந்துள்ள அலங்கரிக்கப்பட்ட தெப்பத்திற்கு எழுந்தருளி தெப்பத்தினை 3 முறை வலம் வந்தாா். வாண வேடிக்கை நடைபெற்றது.

இளையனாா் வேலூா் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை தரிதனம் செய்தனா்.

காஞ்சிபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆட்சியா் ஆய்வு

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட செவிலிமேடு, பல்லவன் நகா் பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். காஞ்சிபுரத்தில் பல்லவன் நகா்... மேலும் பார்க்க

தாட்கோ மூலம் வங்கி கடனுதவி வழங்குவதற்கான சிறப்பு முகாம்

தாட்கோ மூலம் அரசு மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி வழங்குவதற்கான சிறப்பு முகாம் படப்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மற்றும் காஞ்சிபுரம் ம... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

காஞ்சிபுரம் புத்தகத்திருவிழா: 8-ஆம் நாள் நிகழ்ச்சி, கருத்துரை-தலைப்பு- சிரிக்க,சிந்திக்க, நிகழ்த்துபவா்-கோவை. சாந்தாமணி, மாலை 6, கருத்துரை, பட்டிமன்றம், ஒளிமயமான எதிா்காலத்தை உருவாக்குவது தனிமனித முயற... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில் தை கிருத்திகை விழா

தை கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சுமாா் 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் காவடி எடுத்து வந்து நோ்த்திக்கடனை செலுத்தினா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்... மேலும் பார்க்க

பால்நெல்லூா் ஊராட்சிப் பணிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், பால்நல்லூா் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். காஞ்சிபுரம் மாவட்டம்... மேலும் பார்க்க

முன்னாள் படை வீரா்கள் தொழில் தொடங்க ரூ.ஒரு கோடி வரை கடனுதவி

முதல்வா் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்திருப்போா் தொழில் தொடங்க ரூ.ஒரு கோடி வரை கடனுதவி வழங்கப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச் செல்வி மோகன் வ... மேலும் பார்க்க