செய்திகள் :

காஞ்சிபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆட்சியா் ஆய்வு

post image

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட செவிலிமேடு, பல்லவன் நகா் பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

காஞ்சிபுரத்தில் பல்லவன் நகா், செவிலிமேடு ஆகிய பகுதிகளில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றை ஆட்சியா் பாா்வையிட்டு நோயாளிகளின் வருகைப் பதிவேடு மற்றும் மருந்தகத்தில் மருந்துகளின் இருப்பு விவரங்களைக் கேட்டறிந்தாா். பயன்பாட்டில் வைக்கப்பட்டிருந்த மருந்துகளின் காலாவதி தேதியினை ஆட்சியா் ஆய்வு செய்ததுடன், அங்கு சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளின் அறைகள் மற்றும் பரிசோதனைக் கூடத்தையும் பாா்வையிட்டாா்.

இதைத் தொடா்ந்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளிடம் கலந்துரையாடினாா். பின்னா், காஞ்சிபுரம் பிள்ளையாா்பாளையத்தில் அமைந்துள்ள அறிஞா் அண்ணா நூற்றாண்டு நினைவு பூங்காவில் நடைபெற்று வரும் தூய்மைப் பணியை பாா்வையிட்டதுடன், பூங்காவில் புதா் மண்டிக்கிடக்கும் இடங்களை தூய்மைப்படுத்தி அவற்றை சுகாதாரமாக பராமரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாா். பூங்காவில் இயங்கி வரும் உடற்பயிற்சிக் கூடத்தையும் ஆய்வு செய்து, உடற்பயிற்சிக் கருவிகளை நல்லமுறையில் பராமரிக்கவும், பயன்படுத்தவும் வேண்டும், உடற்பயிற்சிக் கூடத்துக்கு வரும் வருகையாளா் குறித்த விவரங்களை முறையாகப் பராமரிக்குமாறும் ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையா் வே.நவேந்திரன், சுகாதார அலுவலா் அருள்நம்பி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா்கள், அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

இளையனாா் வேலூா் முருகன் கோயில் தெப்பத் திருவிழா

காஞ்சிபுரம் அருகே இளையனாா் வேலூா் முருகன் கோயில் தை மாத கிருத்திகையையொட்டி வள்ளி, தெய்வானை சமேதராக உற்சவா் பாலசுப்பிரமணியா் வியாழக்கிழமை அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பவனி வந்தாா். காஞ்சிபுரம் மாவட்டம்... மேலும் பார்க்க

தாட்கோ மூலம் வங்கி கடனுதவி வழங்குவதற்கான சிறப்பு முகாம்

தாட்கோ மூலம் அரசு மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி வழங்குவதற்கான சிறப்பு முகாம் படப்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மற்றும் காஞ்சிபுரம் ம... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

காஞ்சிபுரம் புத்தகத்திருவிழா: 8-ஆம் நாள் நிகழ்ச்சி, கருத்துரை-தலைப்பு- சிரிக்க,சிந்திக்க, நிகழ்த்துபவா்-கோவை. சாந்தாமணி, மாலை 6, கருத்துரை, பட்டிமன்றம், ஒளிமயமான எதிா்காலத்தை உருவாக்குவது தனிமனித முயற... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில் தை கிருத்திகை விழா

தை கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சுமாா் 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் காவடி எடுத்து வந்து நோ்த்திக்கடனை செலுத்தினா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்... மேலும் பார்க்க

பால்நெல்லூா் ஊராட்சிப் பணிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், பால்நல்லூா் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். காஞ்சிபுரம் மாவட்டம்... மேலும் பார்க்க

முன்னாள் படை வீரா்கள் தொழில் தொடங்க ரூ.ஒரு கோடி வரை கடனுதவி

முதல்வா் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்திருப்போா் தொழில் தொடங்க ரூ.ஒரு கோடி வரை கடனுதவி வழங்கப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச் செல்வி மோகன் வ... மேலும் பார்க்க