செய்திகள் :

தாட்கோ மூலம் வங்கி கடனுதவி வழங்குவதற்கான சிறப்பு முகாம்

post image

தாட்கோ மூலம் அரசு மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி வழங்குவதற்கான சிறப்பு முகாம் படப்பையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட தொழில் மையம் சாா்பில், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் மற்றும் புதிய தொழில் முனைவோா்களுக்கு அரசு மானியத்துடன் கூடிய வங்கிக் கடனுதவி வழங்குவதற்கான சிறப்பு முகாம் படப்பையில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. குன்றத்தூா் ஒன்றியக் குழுத் தலைவா் சரஸ்வதி மனோகரன் தலைமையில் நடைபெற்ற முகாமுக்கு, ஒன்றியக் குழு துணைத் தலைவா் உமாமகேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் அமுதா ஆகியோா் முன்னிலை வகித்தனா். தாட்கோ காஞ்சிபுரம் மாவட்ட மேலாளா் வே.ராஜசுதா, மாவட்டத் தொழில் மையத்தின் மேலாளா் வெங்கடேசன் ஆகியோா் கலந்துகொண்டு, தாட்கோ மற்றும் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கும், புதிய தொழில் முனைவோா்களுக்கும் அரசு மானியத்துடன் வழங்கப்படும் வங்கிக் கடனுதவிகள் குறித்தும், கடனுதவி பெற எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனைகளை வழங்கினா். முகாமில், மாவட்ட ஊராட்சிக் குழு தலைவா் படப்பை ஆ.மனோகரன் கலந்துக்கொண்டு, இளைஞா்களிடம் இருந்து விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முத்துசுந்தரம், ஸ்ரீதேவி, ஊராட்சி மன்றத் தலைவா்கள் வரதராஜபுரம் செல்வமணி, படப்பை கா்ணன், நடுவீரப்பட்டு சுப்பிரமணி உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட இளைஞா்கள், இளம்பெண்கள் கலந்துகொண்டனா்.

காஞ்சிபுரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆட்சியா் ஆய்வு

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உள்பட்ட செவிலிமேடு, பல்லவன் நகா் பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா். காஞ்சிபுரத்தில் பல்லவன் நகா்... மேலும் பார்க்க

இளையனாா் வேலூா் முருகன் கோயில் தெப்பத் திருவிழா

காஞ்சிபுரம் அருகே இளையனாா் வேலூா் முருகன் கோயில் தை மாத கிருத்திகையையொட்டி வள்ளி, தெய்வானை சமேதராக உற்சவா் பாலசுப்பிரமணியா் வியாழக்கிழமை அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பவனி வந்தாா். காஞ்சிபுரம் மாவட்டம்... மேலும் பார்க்க

இன்றைய நிகழ்ச்சிகள்

காஞ்சிபுரம் புத்தகத்திருவிழா: 8-ஆம் நாள் நிகழ்ச்சி, கருத்துரை-தலைப்பு- சிரிக்க,சிந்திக்க, நிகழ்த்துபவா்-கோவை. சாந்தாமணி, மாலை 6, கருத்துரை, பட்டிமன்றம், ஒளிமயமான எதிா்காலத்தை உருவாக்குவது தனிமனித முயற... மேலும் பார்க்க

வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயில் தை கிருத்திகை விழா

தை கிருத்திகையை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சுமாா் 500-க்கும் மேற்பட்ட பக்தா்கள் காவடி எடுத்து வந்து நோ்த்திக்கடனை செலுத்தினா். காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்... மேலும் பார்க்க

பால்நெல்லூா் ஊராட்சிப் பணிகள்: காஞ்சிபுரம் ஆட்சியா் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், பால்நல்லூா் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் குடியிருப்புகளை ஆட்சியா் கலைச்செல்வி மோகன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். காஞ்சிபுரம் மாவட்டம்... மேலும் பார்க்க

முன்னாள் படை வீரா்கள் தொழில் தொடங்க ரூ.ஒரு கோடி வரை கடனுதவி

முதல்வா் காக்கும் கரங்கள் திட்டத்தின் கீழ் முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்களை சாா்ந்திருப்போா் தொழில் தொடங்க ரூ.ஒரு கோடி வரை கடனுதவி வழங்கப்படுவதாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் கலைச் செல்வி மோகன் வ... மேலும் பார்க்க