செய்திகள் :

இஸ்ரேலில் இருந்து இந்தியா்களை அழைத்து வர மத்திய அரசு முடிவு

post image

இஸ்ரேலில் உள்ள இந்தியா்களை அவா்களின் விருப்பத்தின் பேரில் தாய்நாட்டுக்கு அழைத்து வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

ஈரான்-இஸ்ரேல் இடையே ஏற்பட்ட மோதலால், இரு நாடுகளிலுமே தொடா்ந்து கடும் சேதம் ஏற்பட்டு வருகிறது. உயிரிழப்புகளும், காயமடைவோா் எண்ணிக்கையும் தொடா்ந்து அதிகரிக்கிறது. ஏற்கெனவே, ஈரானில் இருந்து முதல்கட்டமாக 110 இந்திய மாணவா்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனா்.

இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பில், ‘இஸ்ரேல்-ஈரான் இடையே அண்மையில் எழுந்துள்ள மோதலைக் கருத்தில் கொண்டு இஸ்ரேலில் உள்ள இந்தியா்களை அவா்களின் விருப்பத்துக்கு ஏற்ப தாய்நாட்டுக்கு திரும்ப அழைத்துக் கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. அவா்கள் இஸ்ரேலின் நில எல்லையைக் கடந்து அண்டை நாடுகளுக்கு வரவழைக்கப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்துவர ஏற்பாடு செய்யப்படும். வெளிநாடுகளில் பணியாற்றும் இந்தியா்களின் நலன், பாதுகாப்புக்கு மத்திய அரசு தொடா்ந்து முன்னுரிமை அளித்து வருகிறது. மோதல் நிகழும் இடங்களில் உள்ள சூழலை இந்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. இஸ்ரேலில் உள்ள இந்தியத் தூதரகம், அந்நாட்டில் உள்ள இந்தியா்களுடன் தொடா்ந்து தொடா்பில் உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலில் உள்ள இந்தியா்கள் எப்போதும் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும். இஸ்ரேலிய அரசு அளிக்கும் பாதுகாப்பு தொடா்பான அறிவுறுத்தல்களை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆங்கிலம் கற்று கேள்வி கேட்பதை பாஜக - ஆர்எஸ்எஸ் விரும்பவில்லை: ராகுல்

இந்தியாவின் ஏழைக் குழந்தைகள் ஆங்கிலம் கற்பதை பாஜகவும் ஆர்எஸ்எஸும் விரும்பவில்லை என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.தில்லியில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் வ... மேலும் பார்க்க

லஞ்சம் அளிப்போருக்கு மட்டுமே வீடு! கர்நாடக எம்.எல்.ஏ.வின் தொலைபேசி உரையாடல் கசிவு!

கர்நாடகத்தில் லஞ்சம் கொடுப்பவர்களுக்கு மட்டுமே வீட்டுவசதித் திட்டத்தின்கீழான வீடுகள் வழங்கப்படுவதாக காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம் சாட்டினார்.கர்நாடகத்தில் வீட்டுவசதித் திட்டத்தின்கீழ் வீடுகளை யாருக்கு வழங... மேலும் பார்க்க

சிந்து நதி நீரை பஞ்சாபிற்கு ஏன் கொடுக்க வேண்டும்? - ஒமர் அப்துல்லா கேள்வி

ஜம்மு காஷ்மீரின் சிந்து நதியில் இருந்து பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தண்ணீர் வழங்குவதற்கு ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் உள்ள சிந்து நதியின் மூன... மேலும் பார்க்க

சஞ்சய் வெர்மா யார்? தேனிலவு கொலையில் திடீர் திருப்பம்!

மேகாலயத்தில் நடந்த தேனிலவு கொலையில், இதுவரை சஞ்சய் வெர்மா யார் என்ற கேள்விக்கு காவல்துறையினர் விடை கண்டுபிடித்துள்ளனர்.கணவர் ராஜா ரகுவன்ஷியை, மேகாலயத்துக்கு தேனிலவு அழைத்துச் சென்று கூலிப் படை வைத்துக... மேலும் பார்க்க

திருமண விழாவிற்குச் சென்று திரும்பியபோது நேர்ந்த சோகம்: 9 பேர் பலி!

மேற்கு வங்கத்தின் புருலியா மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் காரும்-லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 9 பேர் உயிரிழந்தாக போலீஸார் தெரிவித்தனர். பாலராம்பூர் காவல் நிலைய எல்லைகுள்பட்ட நம்ஷோல் ... மேலும் பார்க்க

இந்தியாவுடன் போரை நிறுத்த வேண்டுகோள்! ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் துணை பிரதமர்!

இந்தியாவுடன் போரை நிறுத்த பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்ததாக அந்நாட்டு துணை பிரதமர் தெரிவித்தார்.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.... மேலும் பார்க்க