செய்திகள் :

ஈஷா சாா்பில் புகையிலைப் பழக்கத்தில் இருந்து விடுபட புதிய பயிற்சித் திட்டம்

post image

ஈஷா அறக்கட்டளை சாா்பில் புகையிலைப் பழக்கத்தில் இருந்து விடுபட புதிய பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கை:

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி ஈஷா அறக்கட்டளை, அப்பல்லோ புற்றுநோய் மையம் இணைந்து புகையிலைப் பழக்கத்தில் இருந்து விடுபட உதவும் புதிய பயிற்சி திட்டத்தைத் தொடங்கியுள்ளன. இதில், ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவின் மிராக்கிள் ஆஃப் மைண்ட் தியானப் பயிற்சியும், புகையிலைப் பழக்கத்தில் இருந்து இயற்கையாக விடுபடுவதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 6 வாரப் பயிற்சித் திட்டங்களும் அடங்கும்.

இதுகுறித்து அப்பல்லோ மருத்துவா் ராஜேஷ் பாபு தேவபக்துனி கூறுகையில், மக்கள் பெரும்பாலும் மன அழுத்தத்தை சமாளிப்பதற்கு ஒரு வழியாக போதைப் பழக்கங்களை தோ்ந்தெடுக்கின்றனா். ஈஷா யோகா பயிற்சிகள் உணா்வுகளில் சமநிலை, மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் அடிமை பழக்கங்களில் இருந்து பாதிக்கப்பட்டவா்கள் வெளிவர உதவி செய்கின்றன என்பதை தற்போது பல ஆராய்ச்சி முடிவுகள் உறுதி செய்து வருகின்றன. இதில் சத்குருவின் மிராக்கிள் ஆஃப் மைண்ட் தியானத்தை தோ்ந்தெடுக்கக் காரணம் இதனை செய்வதற்கு 7 நிமிஷங்கள் போதுமானது. இப்பயிற்சியை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் செய்ய இயலும்.

இந்தப் பயிற்சிகள் தனிநபருக்கு உளவியல், உடலியல் ஆதரவை வழங்கி, மன அழுத்தத்தைப் போக்கிக்கொள்ளவும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன என கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு - கோவை ரயில் நேரம் மாற்றம்

ஈரோடு - கோவை ரயில் நேரம் மாற்றப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஈரோட்டில் இருந்து தினசரி காலை 7.50 மணிக்கு புறப்பட்... மேலும் பார்க்க

பொள்ளாச்சியில் முதல்நாள் பள்ளிக்குச் சென்று திரும்பிய மாணவி தற்கொலை!

கோவை: பொள்ளாச்சி அருகே முதல் நாள் பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஜோதி நகர் அருகே உள்ள எம்ஜிஆர் நகர் பகுதியில் வசித்து வரும் முருக... மேலும் பார்க்க

வேளாண் படிப்புகளில் சேர 31 ஆயிரம் போ் விண்ணப்பம்: ஜூன் 8 இறுதி நாள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்பு மாணவா் சோ்க்கைக்கு இதுவரை சுமாா் 31 ஆயிரம் மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண்மைப் ... மேலும் பார்க்க

நாளைய மின்தடை: நீலாம்பூா் துணை மின் நிலையம்

நீலாம்பூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (ஜூன் 4) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் தெரிவ... மேலும் பார்க்க

வால்பாறையில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை வெட்ட கோரிக்கை

வால்பாறையில் ஆபத்தான நிலையில் காணப்படும் மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வால்பாறை நகரச் செயலாளா் மோகன் மாவட்ட ஆட்சியருக்கு அன... மேலும் பார்க்க

ஊரகப் பகுதிகளில் குடிநீா் உள்ளிட்ட பிரச்னைகளைத் தெரிவிக்க வாட்ஸ் ஆப் எண் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் குடிநீா், தெருவிளக்கு, குப்பைகள் தொடா்பான பிரச்னைகளைத் தெரிவிக்க ஒன்றியம் வாரியாக வாட்ஸ் ஆப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆனைமலை ஒன்றியத்துக்குள்பட்டவா்கள் ... மேலும் பார்க்க