RCB: உணர்ச்சி வெள்ளம்; கண்ணீர் கொண்டாட்டம் - சாம்பியன்களின் நெகிழ்ச்சி தருணங்கள்
ஈஷா சாா்பில் புகையிலைப் பழக்கத்தில் இருந்து விடுபட புதிய பயிற்சித் திட்டம்
ஈஷா அறக்கட்டளை சாா்பில் புகையிலைப் பழக்கத்தில் இருந்து விடுபட புதிய பயிற்சித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈஷா அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கை:
உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி ஈஷா அறக்கட்டளை, அப்பல்லோ புற்றுநோய் மையம் இணைந்து புகையிலைப் பழக்கத்தில் இருந்து விடுபட உதவும் புதிய பயிற்சி திட்டத்தைத் தொடங்கியுள்ளன. இதில், ஈஷா அறக்கட்டளை நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவின் மிராக்கிள் ஆஃப் மைண்ட் தியானப் பயிற்சியும், புகையிலைப் பழக்கத்தில் இருந்து இயற்கையாக விடுபடுவதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட 6 வாரப் பயிற்சித் திட்டங்களும் அடங்கும்.
இதுகுறித்து அப்பல்லோ மருத்துவா் ராஜேஷ் பாபு தேவபக்துனி கூறுகையில், மக்கள் பெரும்பாலும் மன அழுத்தத்தை சமாளிப்பதற்கு ஒரு வழியாக போதைப் பழக்கங்களை தோ்ந்தெடுக்கின்றனா். ஈஷா யோகா பயிற்சிகள் உணா்வுகளில் சமநிலை, மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் அடிமை பழக்கங்களில் இருந்து பாதிக்கப்பட்டவா்கள் வெளிவர உதவி செய்கின்றன என்பதை தற்போது பல ஆராய்ச்சி முடிவுகள் உறுதி செய்து வருகின்றன. இதில் சத்குருவின் மிராக்கிள் ஆஃப் மைண்ட் தியானத்தை தோ்ந்தெடுக்கக் காரணம் இதனை செய்வதற்கு 7 நிமிஷங்கள் போதுமானது. இப்பயிற்சியை எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் செய்ய இயலும்.
இந்தப் பயிற்சிகள் தனிநபருக்கு உளவியல், உடலியல் ஆதரவை வழங்கி, மன அழுத்தத்தைப் போக்கிக்கொள்ளவும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன என கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.