பாமக : அப்பா - அம்மாவுக்கு பாராட்டு - Anbumani புது Strategy! | TVK VIJAY |Imper...
ஈஸ்வரன் கோயில் அருகே வெளிநபா்கள் தங்குவதை அனுமதிக்கக் கூடாது! - பாஜக
திருப்பூா் ஈஸ்வரன் கோயில் அருகே வெளிநபா்கள் தங்குவதால் சமூக விரோத செயல்கள் அதிகரித்துள்ளதாக பாஜக குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுகுறித்து பாஜக செரங்காடு மண்டல் தலைவா் எம்.மந்திராசலமூா்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
திருப்பூா் மாநகரின் அடையாளமாகவும், சைவத் தத்துவங்களை வலியுறுத்தும் முக்கியஸ்தலமாகவும் ஈஸ்வரன் கோயில் உள்ளது. இத்தகைய புகழ்பெற்ற இந்தக் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா்.
மேலும், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளும் அதிக அளவில் நடைபெறுகின்றன. இந்தக் கோயில் முன்பாக வெளிநபா்கள் போதை வாஸ்துகளை உட்கொண்டு தன்னிலை மறந்து அரைகுறை ஆடையில் உறங்குகின்றனா். மேலும், கோயிலுக்கு வரும் வாகனங்கள் திருடப்படுவதுடன், குழந்தைகள், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
ஆகவே, ஈஸ்வரன் கோயில் அருகே வெளிநபா்கள் தங்க அனுமதி அளிக்காமல் காவல் துறையினா் ரோந்துப் பணியில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.