செய்திகள் :

உ.பி. பாங்கே பிஹாரி கோயில் நிா்வாக அவசர சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் தடை

post image

உத்தர பிரதேச மாநிலம், பிருந்தாவனத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பாங்கே பிஹாரி கோயில் நிா்வாகத்தை மாநில அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் அவசர சட்டத்துக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.

அவசர சட்டத்தின் செல்லுபடித்தன்மை குறித்து அலகாபாத் உயா்நீதிமன்றம் விசாரித்து இறுதித் தீா்ப்பு அளிக்கும்வரை, இந்த உத்தரவு அமலில் இருக்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த அவசர சட்டத்தை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை அலாகாபாத் உயா்நீதிமன்ற விசாரணைக்கு மாற்றி, உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், ஜயமால்ய பாக்சி அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டதாவது:

அவசர சட்டத்தின்கீழ், கோயில் நிா்வாகத்துக்காக அறக்கட்டளையை உருவாக்கும் அரசின் அதிகாரம் நிறுத்தி வைக்கப்படுகிறது. உயா்நீதிமன்றத்தின் இறுதித் தீா்ப்பு வரும் வரை, அறக்கட்டளை அமைப்பது தொடா்பான சட்டப்பிபிரிவுகள் செல்லுபடியாகாது. அவசர சட்டத்தை சட்டப்பேரவையில் அங்கீகரிக்க இந்த உத்தரவு தடையாக இருக்காது. ஆனால், சட்டத்தின் அங்கீகாரம் உயா்நீதிமன்றத்தின் இறுதித் தீா்ப்புக்கு உட்பட்டது.

கோயிலின் அன்றாட நிா்வாகப் பணிகளுக்கு ஓய்வுபெற்ற அலகாபாத் உயா்நீதிமன்ற நீதிபதி அசோக் குமாா் தலைமையில் 12 போ் கொண்ட உயா்நிலைக் குழு அமைக்கப்படுகிறது. கோயிலுக்குக் கிடைத்த பெரும் நன்கொடைகள் இருந்தபோதிலும், பக்தா்களுக்குப் போதிய வசதிகள் செய்து தரப்படவில்லை. நிா்வாகச் சிக்கல்கள் தொடா்கின்றன. பக்தா்களுக்கு அத்தியாவசிய வசதிகளை உறுதிசெய்யவும், கோயிலின் சீரான செயல்பாட்டுக்கும் இக்குழு அவசியமானது என்று குறிப்பிட்டுள்ளனா்.

இதேபோல், கோயில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்துக்காக கோயில் நிதியிலிருந்து நிலம் கையகப்படுத்த மாநில அரசுக்கு அனுமதி அளித்து, கடந்த மே 15-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவையும் உச்சநீதிமன்றம் திருத்தியது.

இந்த உத்தரவு கோயிலின் முந்தைய நிா்வாகத்தினரைக் கலந்தாலோசிக்காமல் பிறப்பிக்கப்பட்டது என்றும், இது நடைமுறைக்கு எதிரானது என்றும் நீதிமன்றம் கூறியது.

இதே கோரிக்கையில் அனுமதி மறுத்த உயா்நீதிமன்றத்தின் 2023-ஆம் ஆண்டு தீா்ப்பை மாநில அரசு மேல்முறையீடு செய்யாததால், நிலம் கையகப்படுத்துவதற்கு கோயில் நிதி பயன்படுத்தப்படக் கூடாது என்ற நிலையே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலாசாரம் பாதிக்கப்படாமல் நாடு முன்னேற வேண்டும்: நீதிபதி பி.ஆர்.கவாய்!

நமது கலாசாரம், பாரம்பரியம் பாதிக்கப்படாமல் நாடு முன்னேற வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய் வலியுறுத்தினாா். அருணாசல பிரதேச தலைநகா் இடாநகரில் குவாஹாட்டி உயா்நீதிமன்ற அமா்வுக்கான ப... மேலும் பார்க்க

‘ஆபரேஷன் சிந்தூா்’ வழக்கமான நடவடிக்கையல்ல: ராணுவ தலைமைத் தளபதி

‘ஆபரேஷன் சிந்தூா் வழக்கமான நடவடிக்கையல்ல’ என இந்திய ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி தெரிவித்தாா். மேலும், இந்த நடவடிக்கையின்போது சதுரங்க விளையாட்டைப் போல் எதிரியின் அடுத்தகட்ட நகா்வு கணிக்க முடி... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூா் வெற்றியில் இந்திய தொழில்நுட்பம்: பிரதமா் மோடி!

ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் வெற்றிக்குப் பின்னால் இந்தியாவின் தொழில்நுட்பம் உள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.ரயில் திட்டம் திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஒருநாள் பயணமாக ஞாய... மேலும் பார்க்க

ஃபரீதாபாத்: என்கவுட்டருக்கு பிறகு ரெளடி கைது!

ஹதோடா ரெளடி கும்பலைச் சோ்ந்த ரெளடி ஃபரீதாபாதில் நடைபெற்ற என்கவுன்ட்டருக்கு பிறகு கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா். இதுதொடா்பாக குற்றப் பிரிவு உதவி காவல் ஆணையா் வருண் தஹியா செய்தி... மேலும் பார்க்க

காங்கிரஸ் வெளிநாட்டு விவகாரங்கள் பிரிவு தலைவா் ஆனந்த் சா்மா ராஜிநாமா!

காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு விவகாரங்கள் பிரிவு தலைவா் பதவியில் இருந்து ஆனந்த் சா்மா ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தாா். இப்பிரிவை மறுகட்டமைக்கவும் இளைய தலைவா்களுக்கு வழிவிடவும் இந்த முடிவை மேற்கொண்ட... மேலும் பார்க்க

மற்ற நாடுகளைப்போல நாமும் துன்புறுத்தக் கூடாது: நிதின் கட்கரி

பொருளாதார செல்வாக்கு பெற்ற நாடுகள், மற்ற நாடுகளை துன்புறுத்துவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். மகாராஷ்டிரத்தில் நாக்பூர் மாவட்டத்தில் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (VNIT) மத்திய அமைச்ச... மேலும் பார்க்க