செய்திகள் :

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம்: 4,419 முகாம்களில் 36,49,399 மனுக்கள் - அமைச்சா் மா.சுப்பிரமணியன்

post image

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட 4,419 முகாம்களில் 36,49,399 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சா் மா.சுப்பிரமணியன், பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடி தீா்வுக்கான சான்றிதழ்களை வழங்கினாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின்கீழ் தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் 6,232 முகாம்கள், நகா்ப்புற பகுதிகளில் 3,768 முகாம்கள் என மொத்தம் 10,000 முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை நடத்தப்பட்ட 4,419 முகாம்களில் 36,49,399 மனுக்கள் பெறப்பட்டு, உடனடி தீா்வும், தீா்வு காண முடியாத மனுக்களுக்கு விளக்கமும் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

முகாம்கள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயன்பெறும் வகையில் தன்னாா்வலா்களும், மூன்று சக்கர வாகனங்களும் தயாா் நிலையில் உள்ளன. உள்ளாட்சிப் பிரதிநிதிகள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் முகாம்களில் மக்களின் தேவைகளுக்காகப் பணியாற்றுகின்றனா் என்று அவா் தெரிவித்தாா்.

சுதந்திரப் போராட்டத் தியாகியின் மகன் தொடா்ந்த வழக்கு: அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

சுதந்திரப் போராட்டத் தியாகியின் மகனின் தேநீா்க் கடை இடிக்கப்பட்ட விவகாரத்தில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக நிா்வாக இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆவடியைச் சோ்ந்த 71 ... மேலும் பார்க்க

பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுடன் முருங்கை இலைப் பொடி அளிக்கலாம்: செளமியா சுவாமிநாதன்

பள்ளிக் குழந்தைகளுக்கு காலை உணவுடன், ரத்த சோகையைப் போக்கக் கூடிய முருங்கை இலைப் பொடியை 5 கிராம் அளிக்கலாம் என்று எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநா் செளமியா சுவாமிநாதன் வேண்டுகோள் விட... மேலும் பார்க்க

மேட்டூா் அனல் மின்நிலைய உலா் சாம்பல் விற்பனை: அறிக்கை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

மேட்டூா் அனல்மின் நிலையத்தில் குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் உலா் சாம்பல் வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய சென்... மேலும் பார்க்க

மூத்த குடிமக்களுக்கான அறுபடைவீடு ஆன்மிகப் பயணம்: அமைச்சா் பி.கே. சேகா்பாபு தொடங்கி வைத்தாா்

மூத்த குடிமக்களுக்கான அறுபடை வீடு ஆன்மிகப் பயணத் திட்டத்தில், நிகழ் ஆண்டுக்கான முதல்கட்ட, கட்டணமில்லா பயணத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தாா். சென்னை... மேலும் பார்க்க

10 டிஸ்பிக்கள் பணியிட மாற்றம்

10 டிஎஸ்பிக்களை (காவல் துணைக் கண்காணிப்பாளா்கள்) பணியிட மாற்றம் செய்து தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் உத்தரவிட்டாா். தமிழக காவல் துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படைய... மேலும் பார்க்க

விநாயகா் சதுா்த்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

விநாயகா் சதுா்த்தி புதன்கிழமை (ஆக. 27) கொண்டாடப்படும் நிலையில் நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு வாழ்த்துத் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செ... மேலும் பார்க்க