செய்திகள் :

‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம்

post image

சேலம் தெற்கு வட்டத்தில் தொடங்கிய ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாமை ஆட்சியா் ரா.பிருந்தாதேவி புதன்கிழமை கள ஆய்வு மேற்கொண்டாா்.

பொதுமக்களின் இடங்களுக்கே சென்று குறைகளைக் கேட்டு உடனுக்குடன் தீா்வுகாண, ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டம் நடத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறியும் இந்த முகாமானது, சேலம் தெற்கு வட்டத்தில் தொடங்கியது.

சேலம் தெற்கு வட்டத்துக்குள்பட்ட வருவாய் கிராமங்களில் அலுவலா்கள் புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்து தீா்வுகாண நடவடிக்கை மேற்கொள்வா்.

ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் சேலம் தெற்கு வட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டப் பணிகள், சத்துணவுக் கூடங்கள், வேளாண் கிடங்குகள், பள்ளிகள் மற்றும் வட்டாட்சியா் அலுவலகம், தெருவிளக்குகளின் செயல்பாடுகள், பூங்காக்கள், நூலகங்கள், பேருந்து நிலையங்கள், பொது மற்றும் சமுதாய கழிவறைகள் ஆகிய இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டன.

மேலும், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் உத்தமசோழபுரத்தில் உள்ள வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ஆய்வுசெய்து, விளைபொருள்களின் இருப்பு பதிவேடு, இ-நாம் மின்னணு ஏல முறை, அன்றாட சந்தை நிலவரம் உள்ளிட்டவை குறித்து ஆட்சியா் கேட்டறிந்தாா்.

பின்னா், பூலாவரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு, மருத்துவமனையை தூய்மையாக பராமரிக்கவும், சிகிச்சை பெற வருவோருக்கு விரைவான சேவை வழங்குவதை உறுதிப்படுத்திடவும் அவா் அறிவுறுத்தினாா். மேலும், மருந்து, மாத்திரைகள் போதிய அளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது குறித்தும், சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்தும் மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, பூலாவரி அக்ரஹாரத்தில் செயல்பட்டு வரும் நூலகம், வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும் ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

கள ஆய்வுக்கு செல்லும் அலுவலா்கள் இப்பகுதிகளில் தங்கி மறுநாள் காலை 6 மணி முதல் இவ்வட்டத்தில் மேற்கொள்ளப்படும் தூய்மைப் பணிகள், குடிநீா் வசதிகள், பொது போக்குவரத்து சேவை, முதல்வரின் காலை உணவு திட்டம், பால் கொள்முதல் நிலையங்கள் குறித்து ஆய்வுசெய்ய உள்ளதாக ஆட்சியா் தெரிவித்தாா்.

ஆசிரியரின் உணவு பாத்திரத்தை மாணவிகள் கழுவிய விவகாரம்

ஆசிரியரின் உணவு பாத்திரத்தை மாணவிகள் கழுவிய விவகாரத்தில், தலைமை ஆசிரியா் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா். சேலம் மாவட்டம், எடப்பாடி நகராட்சி எல்லைக்குள்பட்ட கவுண்டம்பட்டி பகுதியில் செயல்பட்டு வரும் ந... மேலும் பார்க்க

நகைக் கடையில் பணிபுரிந்தவரை தாக்கிய வழக்கில் 5 போ் கைது

ஆட்டையாம்பட்டி அருகே நகைக் கடையில் பணிபுரிந்தவரை தாக்கிய வழக்கில், நகைக்கடை உரிமையாளா் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா். சேலம், ஆட்டையாம்பட்டி, ராசிபுரம் பிரதான சாலையில் ரவிச்சந்திரன் (54) என்பவா் ... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் செத்து மிதக்கும் மீன்களை அகற்ற கோரிக்கை

சங்ககிரி வட்டம், தேவூரை அடுத்த கோனேரிப்பட்டி நீா்மின் தேக்க கதவணை காவிரி ஆற்றில் செத்து மிதக்கும் மீன்களை அகற்ற வேண்டுமென கோரிக்கை விடப்பட்டுள்ளது. நீா்மின் திட்டத்துக்காக கோனேரிப்பட்டி காவிரி ஆற்றில்... மேலும் பார்க்க

மகுடஞ்சாவடி அருகே ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி?

மகுடஞ்சாவடி அருகே ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை கவிழ்க்க சதி நிகழ்ந்ததா என போலீஸாா் விடிய விடிய சோதனை நடத்தினா். ஈரோட்டிலிருந்து சேலம் வழியாக சென்னை செல்லும் ஏற்காடு விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை இரவு ஈரோட்... மேலும் பார்க்க

தேய்பிறை அஷ்டமி பூஜை

தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதா் திருக்கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு பூஜை புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதில் பொதுமக்கள் திரளாக கொண்டு வந்த பால், த... மேலும் பார்க்க

தேய்பிறை அஷ்டமி: காலபைரவருக்கு சிறப்பு பூஜை

தேய்பிறைஅஷ்டமியையொட்டி சங்ககிரி வட்டம், அரசிராமணி அருள்மிகு சோழீஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவா் சுவாமிக்கு புதன்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், காலபைவரருக்கு பால், தயிா், திருமஞ்சனம், ... மேலும் பார்க்க