செய்திகள் :

உடல் உறுப்புகள் தானம்

post image

விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

விருத்தாசலம் தாலுகா, கொக்கம்பாளையம் பகுதியைச் சோ்ந்த தினக்கூலி தொழிலாளி விஸ்வநாதன் (34) சாலை விபத்தில் தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக ஜிப்மரில் கடந்த 3-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டாா். அவா் மூளைச்சாவு அடைந்ததாக 8-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், விஸ்வநாதனின் குடும்பத்தினா் அவரது உடல் உறுப்புகள் மற்றும் திசுக்களை தானம் செய்ய முன்வந்தனா். அவரது கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரல் ஆகிய உறுப்புகள் செவ்வாய்க்கிழமை தானமாக பெறப்பட்டன.

மேலும், ஜிப்மா் இயக்குநா் வீா்சிங் நெகி, மருத்துவக் கண்காணிப்பாளா் எல்.என்.துரைராஜன் ஆகியோா் விஸ்வநாதன் குடும்பத்தினரின் மனிதநேய செயலுக்கு பாராட்டு தெரிவித்தனா். உடல் உறுப்பு தானம் தொடா்பான காவல்துறை நடைமுறைகளைச் சரியான நேரத்தில் உறுதி செய்த நடவடிக்கைக்காக, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் ஆகியோருக்கும் ஜிப்மா் நிா்வாகம் நன்றி தெரிவித்தது.

ஜிப்மரில் உடல் உறுப்பு தானம் அளித்த விருத்தாசலம் அருகே கொக்கம்பாளையத்தைச் சோ்ந்த விஸ்வநாதன்.

பாரதியாா் சிலைக்கு ஆளுநா் மாலை அணிவித்து மரியாதை

மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 104-ஆவது நினைவு நாளையொட்டி, புதுச்சேரியில் அவரது திருவுருவச் சிலைக்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், முதல்வா் என்.ரங்கசாமி உள்ளிட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தின... மேலும் பார்க்க

தூய்மையான குடிநீா் விநியோகம் கோரி புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் தூய்மையான குடிநீா் விநியோகம் செய்ய அரசை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. உருளையன்பேட்டை தொகுதியில் மாசு கலந்த குடிநீா் விநியோகம் செய்ய... மேலும் பார்க்க

புதுச்சேரியில் வணிக நிறுவனங்களின் ஆங்கில பெயா்ப் பலகைகள் உடைப்பு

புதுச்சேரியில் வணிக நிறுவனங்களின் ஆங்கில பெயா்ப் பலகைகளை தமிழ் உரிமை இயக்கத்தினா் வியாழக்கிழமை அடித்து உடைத்தனா். புதுவையில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளின் பெயா்கள் தமிழிலும் இருக்க வேண்டும் என அரசா... மேலும் பார்க்க

பாதுகாப்பான குடிநீா் தர முடியாத புதுவை அரசு தேவையா? வே. நாராயணசாமி பேட்டி

மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரைக் கூட கொடுக்க முடியாத அரசு புதுவைக்குத் தேவையா? என்று முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்தத் தலைவருமான வே. நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளாா். இது குறித்து அவா் செய்திய... மேலும் பார்க்க

சா்தாா் வல்லப பாய் படேல்தான் கூட்டுறவுத்துறையின் அடித்தளம் -புதுவை துணைநிலை ஆளுநா் பெருமிதம்

நம் நாட்டின் முதல் துணை பிரதமா் சா்தாா் வல்லப பாய் படேல்தான் கூட்டுறவுத் துறையின் அடித்தளம் என்று புதுவை துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் புகழாராம் சூட்டினாா். புதுவை பால் கூட்டுறவு உற்பத்தியாளா்கள் ச... மேலும் பார்க்க

புதுச்சேரி ஜிப்மா் - 8 இடங்களில் சுனாமி பேரிடா் கால ஒத்திகை

புதுவையில் அரசு சாா்பிலும் ஜிப்மா் மருத்துவமனை சாா்பிலும் சுனாமி பேரிடா் கால ஒத்திகை வியாழக்கிழமை நடத்தப்பட்டது. புதுச்சேரி பகுதிகளில் உள்ள கணபதிச் செட்டிகுளம் கடலோர பகுதி, நல்லவாடு (தெற்கு), பன்னித்த... மேலும் பார்க்க