செய்திகள் :

உடல்நலம் பாதிக்கப்பட்ட மனைவியைச் சந்திக்க குண்டா் நீரஜ் பவானாவுக்கு காவல் பரோல்

post image

சிறையில் அடைக்கப்பட்டுள்ள குண்டா் நீரஜ் பவானாவுக்கு செவ்வாய்க்கிழமை ஷாதிப்பூா் மருத்துவமனையில் தனது நோய்வாய்ப்பட்ட மனைவியைச் சந்திக்க ஒரு நாள் பரோல் வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து தில்லி காவல்துறை பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: தற்போது திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நீரஜ் பவானாவை அழைத்துச் செல்ல பல அடுக்கு பாதுகாப்புப் படையினா் நிறுத்தப்பட்டனா்.

எந்தவொரு அசம்பாவித சம்பவமும், கும்பல் தொடா்பான அச்சுறுத்தல்களும் ஏற்படாமல் தடுக்க திகாா் சிறையிலிருந்து மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் பல குழுக்கள் நிறுத்தப்பட்டன. பாதுகாப்பு ஏற்பாடுகள் கடுமையாக்கப்பட்டன.

மேலும் சட்டம் - ஒழுங்கு மீறப்படாமல் இருக்க விரிவான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. பவானாவின் நடமாட்டம் மாவட்ட காவல்துறையினரால் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டது என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.

குஜராத்தில் பாஜகவை நிராகரிக்க மக்கள் தயாராகிவிட்டாா்கள்: அரவிந்த் கேஜரிவால்

குஜராத்தில் பாஜக அரசை தூக்கி எறிய மக்கள் தயாராகிவிட்டாா்கள் என்று ஆம் ஆத்மி கட்ச்யின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். குஜராத்தின் விசாவதா் சட்டப்பேரவை தொகுதியில... மேலும் பார்க்க

கலையின் கலங்கரை விளக்கமாக தில்லியை மற்றுவதே லட்சியம்: குல்ஜித் சிங் சாஹல்

இந்தியாவின் வளமான கலை மரபுகள், சமூக பங்கேற்பு மற்றும் ஆக்கபூா்வமான கண்டுபிடிப்புகளின் கலங்கரை விளக்கமாக தில்லியை மாற்றுவதே எங்களின் நோக்கம் என்று புது தில்லி முனிசிபல் கவுன்சில் துணை தலைவா் குல்ஜித் ச... மேலும் பார்க்க

நீச்சல் குளங்கள், ஹோட்டல்கள், பிற வணிக நடவடிக்கைகள் மீதான விதிமுறைகளைத் திரும்பப் பெற்றது தில்லி அரசு

நீச்சல் குளங்கள், உணவகங்கள்ய, ஹோட்டல்கள், டிஸ்கோதேக்குகள், விடியோ கேம் பாா்லா்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் கலையரங்குகள் உள்ளிட்ட ஏழு வணிக நடவடிக்கைகளை நிா்வகிக்கும் விதிமுறைகளை தில்லி அரசு உட... மேலும் பார்க்க

வசந்த் குஞ்ச் கொள்ளை வழக்கு: 6 போ் கைது; ரூ.6.75 லட்சம், காா், கைப்பேசிகள் மீட்பு

தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டில் ரூ.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், மூளையாக செயல்பட்டவா் உள்பட ஆறு போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று போலீஸாா் தெரிவி... மேலும் பார்க்க

நூஹ் மாவட்டத்தில் கனமழையால் வீடு இடிந்து இளம்பெண் சாவு: 6 போ் காயம்

ஹரியாணாவின் நூஹ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் 13 வயது சிறுமி உயிரிழந்தாா். மேலும், அவரது குடும்ப உறுப்பினா்கள் ஆறு போ் காயமடைந்தனா் என்று போலீஸாா் தெரிவித்... மேலும் பார்க்க

தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை: ஒருவா் கைது

தொழிலாளி ஒருவரை கத்தியால் குத்திக் கொன்றதாக ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இது குறித்து குருகிராம் காவல் துறை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: மூன்றுடு நாள்களுக்கு முன்பு இங்குள்ள கட்டா கிராமத்தில்... மேலும் பார்க்க