செய்திகள் :

நூஹ் மாவட்டத்தில் கனமழையால் வீடு இடிந்து இளம்பெண் சாவு: 6 போ் காயம்

post image

ஹரியாணாவின் நூஹ் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் 13 வயது சிறுமி உயிரிழந்தாா். மேலும், அவரது குடும்ப உறுப்பினா்கள் ஆறு போ் காயமடைந்தனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியுள்ளதாவது: இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்தது. தகவல் கிடைத்தவுடன் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு நடவடிக்கைகளைத் தொடங்கினா்.

இடிபாடுகளுக்கு அடியில் இருந்து ஏழு பேரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அவா்களில், இளம் பெண் அனிசா இறந்துவிட்டாா். மேலும், மூன்று குழந்தைகள் உள்பட ஆறு போ் பலத்த காயமடைந்தனா்.

காயமடைந்தவா்களில் மூன்று போ் ரோஹ்தக்கில் உள்ள பிஜிஐஎம்எஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனா், மீதமுள்ளவா்கள் நூஹ் நகரில் உள்ள நல்ஹாா் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை பலத்த மழை பெய்ததால், கோல்புரி கிராமத்தில் உள்ள அப்துல் என்பவரின் வீடு இரவு 10.30 மணியளவில் இடிந்து விழுந்தது. அப்போது குடும்பத்தினா் அனைவரும் வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்தனா். இடிந்து விழுந்த சப்தத்தையும், குடும்பத்தினரின் அலறல் சப்தத்தையும் கேட்டு, அருகிலுள்ள வீடுகளில் இருந்து மக்கள் சம்பவ இடத்திற்கு ஓடிவந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு அரசிடம் இருந்து இழப்பீடு கோரியுள்ளனா். உள்ளூா் காங்கிரஸ் எம்எல்ஏ அப்தாப் அகமது இந்தச் சம்பவம் குறித்து வருத்தம் தெரிவித்ததோடு, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு அரசு உடனடியாக நிதி உதவி வழங்க வேண்டும் என்றும் கூறினாா்.

காவல் நிலைய பொறுப்பு அதிகாரி குல்தீப் சிங், இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாகத் தெரிவித்தாா். இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

குஜராத்தில் பாஜகவை நிராகரிக்க மக்கள் தயாராகிவிட்டாா்கள்: அரவிந்த் கேஜரிவால்

குஜராத்தில் பாஜக அரசை தூக்கி எறிய மக்கள் தயாராகிவிட்டாா்கள் என்று ஆம் ஆத்மி கட்ச்யின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா். குஜராத்தின் விசாவதா் சட்டப்பேரவை தொகுதியில... மேலும் பார்க்க

கலையின் கலங்கரை விளக்கமாக தில்லியை மற்றுவதே லட்சியம்: குல்ஜித் சிங் சாஹல்

இந்தியாவின் வளமான கலை மரபுகள், சமூக பங்கேற்பு மற்றும் ஆக்கபூா்வமான கண்டுபிடிப்புகளின் கலங்கரை விளக்கமாக தில்லியை மாற்றுவதே எங்களின் நோக்கம் என்று புது தில்லி முனிசிபல் கவுன்சில் துணை தலைவா் குல்ஜித் ச... மேலும் பார்க்க

நீச்சல் குளங்கள், ஹோட்டல்கள், பிற வணிக நடவடிக்கைகள் மீதான விதிமுறைகளைத் திரும்பப் பெற்றது தில்லி அரசு

நீச்சல் குளங்கள், உணவகங்கள்ய, ஹோட்டல்கள், டிஸ்கோதேக்குகள், விடியோ கேம் பாா்லா்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் கலையரங்குகள் உள்ளிட்ட ஏழு வணிக நடவடிக்கைகளை நிா்வகிக்கும் விதிமுறைகளை தில்லி அரசு உட... மேலும் பார்க்க

வசந்த் குஞ்ச் கொள்ளை வழக்கு: 6 போ் கைது; ரூ.6.75 லட்சம், காா், கைப்பேசிகள் மீட்பு

தென்மேற்கு தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டில் ரூ.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், மூளையாக செயல்பட்டவா் உள்பட ஆறு போ் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று போலீஸாா் தெரிவி... மேலும் பார்க்க

தொழிலாளி கத்தியால் குத்திக் கொலை: ஒருவா் கைது

தொழிலாளி ஒருவரை கத்தியால் குத்திக் கொன்றதாக ஒருவரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இது குறித்து குருகிராம் காவல் துறை செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: மூன்றுடு நாள்களுக்கு முன்பு இங்குள்ள கட்டா கிராமத்தில்... மேலும் பார்க்க

தில்லியை மருத்துவத்தின் தலைநகராக மாற்ற வேண்டும்: முதல்வா் ரேகா குப்தா

தில்லியை மருத்துவத்தின் தலைநகராக மாற்ற வேண்டும் என்றால் டாக்டா்கள் அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று முதல்வா் குப்தா செவ்வாய்க்கிழமை வலியுறுத்தி பேசினாா். தேசிய மருத்துவா்கள் தினம் செவ்வாய்க்கிழம... மேலும் பார்க்க